01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Thursday, June 27, 2013

மாறவேண்டிய சூழலில் விஜயகாந்த்;;



திமுக கனிமொழிக்கு 31 ஓட்டுகள் கிடைத்துள்ளது..


தேமுதிக இளங்கோவனுக்கு வெறும் 22ஓட்டுகள் 
மட்டுமே கிடைத்துள்ளது


#தேமுதிக வில் இருந்து 7 எம்.எல்.ஏக்களை பிரித்து

இரண்டாம் தர அரசியல் செய்த அதிமுக'வும்...


















#தேமுதிக'விற்கு ஆதரவு தருவதைப்போல் 

பேசி இறுதியில் தனது பால்ய 2G நண்பனுடன்
சேர்ந்த காங்கிரசும்...







நேரடியாகவே தேமுதிக கட்சிக்கு துரோகம் இழைத்துள்ளது.... 
திரு.விஜயகாந்த் அவர்களுக்கு உண்மையில் உணர்வு இருந்தால்
இவரை புறக்கணித்த இருவரையும் இனி நேரடியாக புறக்கணித்து 
ஒதுக்கிவிட்டு மக்களவை தேர்தலை எதிர்கொண்டு வென்று காட்டவேண்டும்.

#NK - ஆருத்ரன்^

Wednesday, June 26, 2013

சமூக வலைதளங்களால்... நிகழும் சில சமூக நற்காரியங்கள்;;





முகநூலில் வெட்டியாக மொக்கைகளையும், கடலைகளையும்
மட்டுமே போட்டு 
இளைஞர்கள் நேரத்தை வீணடிக்கின்றனர் 
என்று விமர்சனம் செய்யும் ஆனந்த விகடன் போன்ற சில கவர்ச்சி 
புத்தக பத்திரிக்கைகள் இது போன்ற செய்திகளை முதலில் படியுங்கள்.

மாணவர் போராட்டம் மற்றும் கூடன்குள போராட்டம் போன்றவை முகநூல் 
மற்றும் கீச்சுலகில் தான் வீரியம் அடைந்தன என்பதை விபரமற்ற உங்களுக்கு 
முகநூல் இளைஞர்கள் சார்பில் அழுத்தமாக கூறிகொள்கிறேன்..

- ஆருத்ரன்^ #NK

Tuesday, June 25, 2013

புதிய சாதனை...ICC Champion Trophy;;







புதிய சாதனை...முதல் முறையாக தோனி வெல்லும் ICC Champion Trophy கோப்பை இது.
*Twenty20 உலக கோப்பை, ODI உலக கோப்பை, மற்றும் ICC Champion Trophy கோப்பை இது மூன்றையும் வென்ற ஒரே கேப்டன் என்ற புகழை பெறுகிறார் தோனி..
*ஆஸ்திரேலியா'வின் தொடர் வெற்றியை ODI உலக கொப்பைக்கி பிறகு மீண்டும்
ஒருமுறை இந்தியா தடுத்துள்ளது..
*இந்தியாவின் முதல் தனி பெரும்பான்மை கோப்பை வெற்றி மற்றும் இரண்டாவது ICC Champion Trophy கோப்பை 
*இந்த தொடரில் எந்த ஆட்டத்திலும் இந்தியா தோற்கவில்லை...
*இந்த கோப்பை தொடரில் நம் தமிழ் வீரர் அஸ்வின்; மற்றும் புதுமுக வீரர்  தவான்
பங்கு மிகவும் குறிப்பிடத் தக்கது...
*ஐபில் சூதிற்கு பிறகு இந்த உண்மையான வெற்றி இந்திய மக்களுக்கு மன நிறைவளிக்கிறது.





- ஆருத்ரன்^

Tuesday, June 11, 2013

புது ட்விட்டர் கையேடு

புது ட்விட்டர் கையேடு 

புதுசா சென்னைக்கு வந்தவங்க எல்.ஐ.சி பில்டிங்கை அண்ணாந்து பாக்குற மாதிரி ட்விட்டரை வாயை பொளந்து பாக்கும் புது ட்விட்டரே(கீச்சரே) வருக வருக....

உங்களுக்கெல்லாம் இங்க என்ன நடக்குதுன்னு? என்னலாம் பண்ணலாம்ன்னு சுருக்கமா சொல்ல பாக்குறேன்.


ட்விட்டரை இங்க 'கீச்சகம்'ன்னு தான் சொல்லுவாங்க.
ட்விட்டர் உருவான கதைய தமிழ் வரலாற்றை அடிப்படையா வச்சு சொன்னா... திருவள்ளுவர் தான் முதல் ட்விட்டர். அவரு வம்சாவளில வந்த யாரோ தப்பிச்சு போய் தான் அமெரிக்காவுல அவரோட பழக்கத்தை பரப்பி...அதை இந்த ஜாக்கு(ட்விட்டர் ஓனர்) பய கத்துகிட்டு 140 எழுத்துக்கு மேல ட்விட்ட முடியாதுன்னு வச்சு நம்மளை சாவடிக்குறான்...அப்படின்னு தமிழ் கூறும் ட்விட்டர் உலகம் பெருமையா  சொல்லிக்கும்.

ட்விட்டர் வடிவேலு ஸ்டைலில் சொன்னா ஒரு ரத்த பூமி. வந்தவங்க யாரும் மொக்கைல இருந்து தப்பிக்க முடியாது. கண்டிப்பா காதுல ரத்தம் வரத்தான் செய்யும். ட்விட்டர் வரும்போதே சூடு சொரணைய கழட்டி வச்சுட்டு வர்றது தான் நல்லது. சண்டைல கிழியாத சட்டையா என சட்டை செய்யாமல் வந்தா தான் பொழப்பு ஓட்ட முடியும்.

இங்க என்னலாம் பண்ணலாம் அப்படின்னு நீங்க கேட்டா எதுவும் உருப்படியா பண்ண முடியாதுன்னு சொல்லலாம். உபயோகமா பொழுதை கழிக்கிற மாதிரியே தெரிஞ்சாலும், நாம அடிமை ஆக தான் அதிக வாய்ப்பு இருக்கு. ஆனா சில சமயம், உங்க திறமைக்கு நல்ல அங்கீகாரமும் கிடைக்கும்.

ட்விட்டை இங்க 'கீச்சு'ன்னு தான் சொல்லுவாங்க.

ட்விட்டர் ஒரு தனி உலகம்....வெளிய டீ ஆத்த கூட வக்கு இல்லைனாலும், உள்ள வந்து அரண்மனையே கட்டுவாங்க...வெளிய கோடி கோடியா சொத்து இருந்தாலும்...ட்விட்டர்ல பாலோயர்ஸ் இல்லைனா பிச்சைக்கார அனாதை தான்.

புதுசா ட்விட்டர்க்கு வர்ற எல்லாருமே ஆட்டோமேட்டிக்கா இந்த அனாதை லிஸ்ட்ல தான் வருவாங்க...என்ன தான் தன்னோட வெட்டி திறமை எல்லாத்தையும் வெளிய காமிச்சாலும் ஒரு பயலும் அவ்ளோ சீக்கிரமா சீண்டமாட்டாங்க. காரணம், சமுதாய ஏற்ற தாழ்வு ட்விட்டர்ல..பிரபல ட்விட்டர்களின் ஒரே டையமில் நெறய பிகர(ட்விட்டர்) மெயின்டையின் பண்ண முடியாத வீக்குநேசு...இதெல்லாம் சேர்ந்து உங்களுக்குள்ள பிரபல ட்விட்டர் ஆகணும்னு ஒரு வெறிய ஏற்படுத்தும். அந்த வெறில நீங்க என்ன பண்ணனும்னு தெரியாம முழிக்க கூடாதுன்னு தான், கீழே சில விஷயங்களை விளக்கியுள்ளேன்.

140க்குள் கீச்சனும் என்பதால் பல விஷயங்களை சுருக்கமா தான் சொல்லுவாங்க. அவைகளில் சில கீழே...

TL என்றால் டைம் லைன். இங்க தான் நீங்க பாலோ பண்ணறவங்க எல்லா கீச்சும் பாக்குற இடம். தமிழ் கீச்சர்கள் டைம் லைனை சந்துன்னு தான் சொல்லுவாங்க.

DP என்றால் தீபிகா படுகோன் என்று நீங்கள் நினைத்தால் தவறு....DP என்றால் Display Picture ன்னு அர்த்தம்.

DM என்றால் டைரக்ட் மெசேஜ்...இதுல செய்தி அனுப்பிச்சா அந்த ரெண்டு பேத்துக்கு மட்டும் தான் தெரியும். ட்விட்டர் கடலை உலகின் நாடி துடிப்பே இது தான். பல பேர் திட்டுவாங்குறதும், காரி துப்புரதை கரெக்டா கேட்ச் பிடிக்கிறதும் இங்க தான்.

'#TAG' இந்த மாதிரி ஏதாவது டேக் போட்டா அதே டேக்ல எல்லாரும் கீச்சுனா...அது தேடி எடுக்க சவுகரியமா இருக்கும். ட்விட்டர் ட்ரேண்டுல கூட வரும்.

RT ன்னா ரீட்வீட் . செல்போன் மெசேஜ் பார்வொர்ட் பண்ண மாதிரி தான். இதுக்கு இருக்குறதுலே மவுசு அதிகம். ஒரு ட்வீட்டை போட்டுட்டு அது RT ஆகுமன்னு நாக்கை தொங்கபோட்டு பாக்குறவன் தான் சராசரி கீச்சர்.

MT ன்னா மாடிபைடு ட்வீட். அடுத்தவன் போட்ட கீச்சை லைட்டா மாத்தி அர்த்தத்தை வேற மாதிரி ஆக்கி கோர்த்துவிடுறதுக்கு தான் இந்த கலை பெரும்பாலும் பயன்படுது.

LOL ன்னா வாய் விட்டு சிரித்தல் சுருக்கமா வாவிசி

ROFL ன்னா தரையில் விழுந்து புரண்டு சிரித்தல் சுருக்கமா தவிபுசி

EKSI ன்னா என்ன கொடுமை சரவணன் இது சுருக்கமா எகொசஇ

தி.பா.சி  ன்னா திரையை பார்த்து சிரிக்கிறேன் என்பதன் சுருக்கம்

CLT ன்னா Currently Listening To

வ.பா ன்னா "வலை பாயுதே" அப்டின்னு ஆனந்த விகடன்ல ஒரு பக்கம் முழுக்க அந்த வாரத்துல போட்ட சிறந்த கீச்சு எல்லாம் வரும். அதுக்காகவே வாரம் முழுக்க கீச்சுர கூட்டமும் இருக்கு. எல்லா புகழுக்காக தான். உடனே, புகழ் யாரு? அழகான பையானன்னு மொக்க போடக்கூடாது. டைரக்டர் சங்கரோட படம் சின்ன பட்ஜெட்ல கூட வரும், ஆனா இந்த தோட்டாவோட@thotta கீச்சு இது வரை வ.பா ல வராம இருந்ததே இல்லை.இதை பாத்து வயுறு எரிய ஒரு குருப்பே இருக்கு.

நநீகி ன்னா 'நடு நிசி கீச்சு'. அது தான்பா பலான விஷயத்தை பப்ளிக்கா பேசுறது.இதை பொதுவா ஆண்கள் தான் பண்ணுவாங்க. பெண்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பாங்க. மத்த பெண்கள் அமைதியா படிச்சிட்டு சிரிச்சுக்குவாங்க...

இதுக்கு மேலையும் நிறைய இருக்கு.. தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க்கை அமுக்குங்க.. (உபயம்: @thirumarant நன்றி)

http://t.co/NdsG6mVh 

 பக்கத்து வீடு கடலில் காணாம போனாலும், கடமை தவறாமல் கடலை போடும் கட்டதொற @kattathora போன்ற கணவான்களும் இங்கு உள்ளனர் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

கடலைக்கு கட்டதொறன்னா கவிதைக்கு கருப்பு @iKaruppiah தான். மனுசன், மத்த மனுஷங்க நடமாட  விடாம கவிதை போட்டே துரத்திருவான். இவன் இல்லாத பொழுதுகளில், "அவள் இல்லாத பொழுதுகளில்..."ன்னு ஸ்டார்ட் பண்ணி கவிதையா போட்டுட்டு இருப்பான் இந்த சிவ்வ்வ்வா @Siva_buvan. கவிதை எழுதுறதுல வாலி,வைரமுத்து க்கு அப்புறம் இவங்க தான்னு பேசிக்கிறாங்க...அவ்வவ்

ட்ரெயின்னுக்கு தக்கல் டிக்கெட் போடுறவன் கூட எவ்வளோ நேரம் வெயிட் பண்ணாலும் டிக்கெட் வாங்கினதும் வீட்டுக்கு போயிருவான். ஆனா இந்த ராஸ்கோலு @RazKoLu ட்விட்டரை விட்டு போய் நான் பார்த்ததே இல்ல...மனுஷனுக்கு வாழ்க்கைன்னு ஒன்னு இருக்கான்னு 'வியக்கேன்'... சந்தானத்தோட ட்விட்டர் ஜெராக்ஸ் காப்பி இவருன்னு பேசிக்கறாங்க...அவ்வ்வ்வ் (அவ்வ்வ்வ்க்கு எல்லாம் விளக்கம் சொல்ல முடியாது போங்கய்யா)

பள்ளிகூடத்துல கேள்வி கேட்டாலே பல்லு இளிக்கற நம்மள ட்விட்டர்ல  ஒருத்தர் நிக்க வச்சு டெய்லி 5 கேள்வி கேப்பார். அது இவர் தான் @2nrc. இவரோட க்விஸ் ப்ரோக்ராம்க்கு(KDQ) தனி ஃபேன்ஸ் கூட்டமே இருக்கு. சூர்யாவோட 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி'க்கு வெளிய மவுசு இருக்கோ இல்லையோ...இவரோட KDQக்கு ட்விட்டர்க்குள்ள நல்ல மவுசு இருக்கு...

ட்விட்டர் மொக்கையா இருக்குன்னு நினைக்குறவங்க...சாய் சித்ரா கீச்சை பாத்தா அந்த நினைப்பை விட்டுருவாங்க. மொக்கைய முழுசா குத்தகைக்கு எடுத்து வச்சு இருக்காங்க,

இந்த மாதிரி நெறைய பேர் இருக்காங்க(எல்லாரை பத்தியும் சொல்ல முடியல). இப்படி தான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இலாகாவை கைல வச்சுட்டு ஆடுறாங்க. சரி, 'இதுல எப்பிடி நலம்தான வாசிக்கிறதுன்னு'(பொழப்பு ஓட்டுறது) பாக்குறீங்களா?

இந்த மாதிரி யோசிச்ச சிலர் தான் தப்பான வழிகள்ல போக வாய்ப்பு இருக்கு. அதுல ஒன்னுதான் இந்த ஃபேக் ஐடி. தன்னை பாலோ பண்ணாதவங்களையும், கிண்டல் பண்ணவங்களையும் பழிவாங்க ஒரு பொண்ணோட பேர்ல ஐடி உருவாக்கி ஒரு ஹீரோயின் போட்டோவை வச்சா போதும். நம்ம ஆளுக தான் வெளக்கமாத்து குச்சிக்கு புடவை சுத்துனாலும் சுத்தி சுத்தி வருவாங்கள...மிச்சத்தை அவங்களே கற்பனை பண்ணி அவங்களே ஏமாந்துக்குவாங்க... இந்த மாதிரி யார்கிட்ட எல்லாம் ஏமாறுறோம்ன்னு TWEET UP ல சில சமயம் தெரிஞ்சிக்களாம். கீச்சு உலக நண்பர்கள் எல்லாம் நிஜ உலகில் சந்திக்கிற நிகழ்ச்சி தான் TWEET UP. அதான்யா get to gether.... 

இன்னும் சிலர் தன்னை பாராட்டுற ஆர்வத்துலையோ வேற ஏதோ காரணத்துனாலையோ, சர்ச்சைக்குரிய விசயங்களிலோ/தனி மனித தாக்குதல் வார்த்தைகளை கீச்சுருவாங்க...

இந்த மாதிரி தப்பான வழிகள்ல போய் சைபர் கிரைம் போலீஸ் கிட்ட கூடாதுன்னு தான் இந்த ட்விட்டர் கையேடு.

ஒரு கம்பெனிக்கு brand எவ்ளோ முக்கியமோ...கிட்டத்தட்ட ஒரு ட்விட்டர்க்கும்  ஒரு அங்கீகாரம் இருந்தா தான் மதிப்பாங்க...அதை தான் முதல கொண்டு வரணும். அதுக்கு நீங்க தனியா எதுவும் பண்ண தேவை இல்லை. உங்க திறமைய எல்லாம் காமிச்சா போதும்(இங்க தான் நெறைய அடிமைகள் இருக்காங்க அதை சகிச்சுக்க...).  இது போக கொஞ்சம் அரசியல் பண்ணனும். தனி திறமை எதுவும் இல்லைனா....கொஞ்ச நாள் TLஐ வேடிக்கை பாருங்க. அட்ரஸ் தொலைஞ்ச மாதிரி(உங்கள மாதிரி) கொஞ்சம் பேர் சுத்திட்டு இருப்பாங்க. அவங்க கூட மொக்க போட ஆரம்பிச்சா நல்ல கம்பெனி குடுப்பாங்க. 

அப்படியே அந்த கூட்டத்து ஆளுங்க எல்லாம் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பிச்சுக்கலாம். கூட்டத்துல பிரபல ட்விட்டர் ஆத்து ஆத்துன்னு சொற்பொழிவு ஆத்தும்போது, நடுவுல அந்த சங்கத்து பேரை சொல்லி கூட்டத்துக்குள்ள  புகுந்து ஒரு கொட்டுவச்சா மாதிரி வரம்பு மீறாம ஒரு கருத்தை சொல்லிட்டு வந்தா போதும். ஏதோ பூனைக்கு மணி கட்டுனா மாதிரி உங்களை 
பாராட்டுவாங்க...அப்புறம் நீங்க அந்த பிரபல ட்விட்டர் தவிர மத்த எல்லாருக்கும் பாலோ பண்ற ட்விட்டர் ஆகிறலாம். உங்க சங்கமும் பேமஸ் ஆயிடும். அப்படி பேமஸ் ஆனவங்க தான் இந்த ரேணிகுண்டா பாய்ஸ்.

எவ்ளோ சாணிய கரைச்சு ஊத்துனாலும் தாக்குபிடிப்பாங்க...

ஆனா, இதுக்கும் நேரம் காலம் பாத்து தான் பண்ணனும். இல்லைனா சைபர் க்ரைம் சொல்லிடுவாங்கோ...அவ்வ்வ்வ்வ் இதுக்கு மேல நம்மள  சந்தோசப்படுத்த தான் இந்த சண்டை எல்லாம் இருக்கு. ஆண் ஆதிக்கம்- பெண்ணாதிக்கம், இசைஞானி-இசைப்புயல் அப்டின்னு டாபிக் எடுத்து கோட்டு போடாத கோபிநாத்கள் நீயா-நானா ப்ரோக்ராம் நடத்துவாங்க. நல்ல வேடிக்கை பாக்கலாம் இல்லை இறங்கி சண்டையும் போடலாம்.

ஆனா ஒன்னு மட்டும் உறுதி, அமெரிக்காவுல ஒருத்தன் வீட்ல கட்டில் ஸ்க்ரு கழண்டு விழுந்தா கூட ட்விட்டர்ல நியூஸ் வந்த பிறகு தான் அந்த வீட்டு ஒனர்க்கே தெரியும். எப்பிடி தான் இவ்ளோ சீக்கரமா நியூஸ் கிடைக்குமோ தெரியல...

சரி...இதெல்லாம் பண்ணா என்ன தஞ்சாவூர் கல்வெட்டுலையா என் பேரை வெட்டி வைக்க போறாங்கன்னு நீங்க கேக்கலாம். இல்லை. ஆனா, பல பத்திரிக்கைல உங்க பேரு வர வாய்ப்பு இருக்கு. மன்னர் கசிவு (@RajanLeaks) பெயர் கூட இப்பிடி தான் 'இந்தியாவுலேயே அதிக பேரை பாதித்தோர்'(என்ன அர்த்தம்ன்னு புரியல) என்ற ட்விட்டர்க்கான பகுதில ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைல ஒரு சின்ன கட்டுரை போட்டாங்க. இந்த மன்னர் கசிவு யார்னு விளக்க ஆரம்பிச்சா...இன்னொரு தனி பதிவே போடணும். அதனால வேற எங்காவது போய் படிச்சுகொங்க...அவ்வ்வ்வ் 

ஆங்.. இவ்ளோ போட்டுட்டு தமிழ்ல எப்படி கீச்சுறதுன்னு போடலேன்னா எப்படி? பிடிங்க அதுக்கு தனி லிங்க்..

http://sakthivelennathasolla.blogspot.com/2013/02/blog-post_24.html

இவ்ளோ வக்கணையா பேசுறியே அப்படி நீ தான்பா கழட்டுற கேக்குற வாய்சு கேக்குது...அது தெரியாம தான், ஹோட்டல் முதலாளி, சமைச்ச எல்லா அயிட்டத்துலையும் நக்கி பாக்குறா மாதிரி, எல்லாத்தையும் ட்ரை பண்றேன்.
நான் இங்க விடாம பண்ற ஒரே காரியம்ன்னா அது காலைல வணக்கம் தனி தனியா சொல்றது தான். இதனால, என்னை சிலர் ட்விட்டர் வரவேற்பாளர்ன்னு கூட சொல்றாங்க. அதனால, வணக்கம் சொல்லற இலக்காவ மட்டும் இந்த ஜாக்கு பையன்கிட்ட சொல்லி காப்புரிமை(கோட்டு கோபி சொல்ற மாதிரி) வாங்கிக்கலாமான்னு யோசிச்சிங்...

இதுக்கு மேலேயும் தமிழ் கீச்சுலகம் பத்தி தெரிஞ்சுக்க எனக்கு ஆர்வம் பொத்துகிட்டு வருதுன்னு சொல்லுறவங்க @karaiyaan னோட கீழ இருக்குற வெப்சைட் போய் பாருங்க..
http://twitamils.com/

                                                    
 - நன்றி,
ச.சக்திவேல் 

Monday, June 10, 2013

கீச்சுலகில் காணொளிகளை பதிவேற்றும் முறை

கீச்சுலகில் காணொளிகளை பதிவேற்றும் முறை:


How to Upload a Video to a Twitter Account


Twitter is a social website that allows its members to connect to their family and friends 
through tweets. A tweet is a status that the user writes to let their followers (Twitter friends) know what is going on throughout their day. Also with Twitter, you can upload multimedia tweets, such as videos.





Instructions



    • 1
      Log in to your Twitter account.
    • 2
      Open up another tab or window, and access the TwitVid website.
    • 3
      Log in into TwitVid using your Twitter username and password.
    • 4
      Click on “Upload” and select the video you wish to upload to Twitter.
    • 5
      Add your comments in the “Comment Box,” then press “Tweet Video.”
    • 6
      Go back to the window that contains your Twitter account page, and click the “Refresh” button. You should see your video appear on your homepage.

      >> TwitVid & Telly http://telly.com/ <<

      Tips & Warnings

      • If you do not have a Twitter account, simply go to the Twitter website, and click “Sign Up.” You will need a valid email address to sign up.

        [Courtesy: ehow for twitter enquiry]

Sunday, June 9, 2013

''ஒரு வெளம்பரம்...'' வட்டியும் முதலும் - ராஜு முருகன்

வட்டியும் முதலும் - ராஜு முருகன்



''ஒரு வெளம்பரம்...''





















கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் சொல்கிற இந்த டயலாக் வெறும் காமெடி அல்ல என்பதைப் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். சமீபத்தில் அருணகிரி அவர்களைப் பார்த்ததும் அப்படியான சந்தர்ப்பம்தான். கும்பகோணத்தின் குறுகலான தெரு ஒன்றில் பழைய ஓட்டுக்கட்டு வீட்டின் திண்ணையில் அவரைச் சந்தித்தேன். வீடு முழுக்க உடைந்த மரப்பெட்டிகள் குவிந்திருந்தன. கொல்லைக்கட்டில் பழைய சோடா மெஷின்கள் இரண்டு சிதிலமாகி நின்றன. சாவதற்கு முந்தைய நாள் கொல்லைக்கட்டு கயித்துக் கட்டிலில் ஜம்பு தாத்தா படுத்திருந்தது ஒருகணம் நினைவில் 'க்ளிக்’கடித்தது. 15 வருடங்களுக்கு முன்பு இதே வீட்டுக்கு வந்தபோது எப்படி இருந்தது..? கூடம் முழுக்கப் பன்னீரும் ரோஜாவுமாக ஒரு வாசனை... தடதடதடவென மெஷின்கள் ஓடிக்கொண்டேயிருக்க... குறுக்கும் மறுக்குமாக ஆட்கள் ஓடிக்கொண்டே இருந்த சித்திரம்... ஜரிகை வேட்டியில் வாய் நிறைய வெத்தலையும் ஜவ்வாது வாசமுமாக நடுக்கூடத்தில் நின்று சைகையில் மிரட்டிக்கொண்டு இருக்கும் அருணகிரி அய்யாவின் ஆகிருதி... எதுவும் இன்று இல்லை.

இந்திய சுதேசி சிறுதொழிலின் ஒட்டுமொத்த இன்றைய சித்திரம்போல் இருந்தது அந்த வீடு. அருணகிரி அய்யாவின் சோடா, கலர், பன்னீர் சோடா என்றால், சுத்துப்பட்டில் அவ்வளவு பிரபலம்... ஒருகாலத்தில்! தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம் வரைக்கும் வியாபாரம் அள்ளும். கோயில் கோபுரம் போட்டு பக்கத்தில் ஒரு ரோஜாப் பூ வரைந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பன்னீர் சோடா கிடைக்காத கடை இருக்காது. வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே திண்ணைத் தூணில் சாய்ந்தபடி, ''நீ இந்த சோடாவ எங்கயும் குடிக்க முடியாது... காவேரித் தண்ணிக்குன்னு ஒரு டேஸ்ட்டு இருக்கு... கோரையாத்து தண்ணின்னா இன்னும் விசேஷம்... அதானே நம்ம பெசல்...'' என்பார் அருணகிரி அய்யா. இப்போது அந்த கம்பெனியே இல்லை. அழுக்கு வேட்டியும் துண்டுமாக அய்யாவைப் பார்க்கவே மனசுக்கு ஒருமாதிரி இருந்தது.

''கம்பெனிய வுடு... இன்னுங் கொஞ்ச காலத்துல காவேரியே இல்லாமப் போயிருமோனுல்ல பயமாருக்கு... வர்றப்போ பாத்தியா... கம்னாட்டிப் பசங்க மணலா அள்ளி எப்பிடி கட்டாந்தரையாக் கெடக்குன்னு... ம்ம்ம்ம்'' - பெருமூச்சு விட்டபடி சிரித்த அருணகிரி அய்யாவிடம், ''கம்பெனி என்னாச்சுங்க..?'' என்றேன். அவர் முகம் ஏதேதோ உணர்ச்சிகளுக்குப் போனது. ''எல்லாம் போயிருச்சு தம்பி...'' என்றவர் கொல்லைப் பக்கமாக அழைத்துப் போனார். சிதிலமான மெஷின்களுக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டு ஏதேதோ பேசினார். கடைசியாகச் சொன்னார், ''தம்பி இது விளம்பர உலகம்... டெண்டுல்கர், டோனி, விஜய், சூர்யானு எல்லாப் பயலுகளும் தெனம் தெனம் வந்து 'பெப்சி குடி’, 'கோக்கு குடி’னு ஆடுறான்... பாட்றான்... உருண்டு பொரள்றான்... இந்தப் பய மக்க அதைக் கேக்குமா... இந்த அழுக்கு வேட்டி அருணகிரி சொல்றதக் கேக்குமா? நாம என்ன செஞ்சோம்? இந்தா பாபநாசம் பக்கம் மோட்டார் செட்டு சொவத்துல எழுதி வெச்சதுதான் ஜாஸ்தி... கொமரிமுத்துவக் கொண்டாந்து வெளம்பரம் சொல்றதுக்குகூடத் திராணி கெடையாது... பெருமொதலாளி இல்லையேப்பா. எல்லாப் பயலும் இங்கிலீஸ் கம்பெனி ஐட்டத்துக்குப் போயிட்டான்... நம்ம யாவாரம் அப்பிடியே படுத்துருச்சு. ரெண்டு புள்ளைகளும் குடும் பத்தோட சூரத்துக்குத் துணி யாவாரம் பண்ணப் போயிட்டானுவோ. நா இப்பிடியே இந்த வூட்ல ஒண்டிக்கிட்டேன். தூங்குனா காதுக்குள்ள லொடலொடலொடனு சோடா மெஷின் ஓட்ற சத்தமா கேக்குது... எவ்வளவு நாளைக்குனு பாக்குறேன்.''

அங்கிருந்து திரும்பும்போதுதான் தோன்றி யது. அவர் சொன்னது எவ்வளவு உண்மை? நம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு விளம்பரங்களால் நிறைந்துகிடக்கிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எத்தனை எத்தனை விளம்பர முகங்களும் குரல்களும் நம்மை ஆக்ரமித்துக்கொள்கின்றன? காபி, டீயில் இருந்து கட்டில் மெத்தை வரைக்கும் எதை வாங்குவது, எப்படி வாழ்வது என எல்லாவற்றையும் விளம்பரங்கள்தான் தீர்மானிக்கின்றன. இந்த தேசமே விளம்பரங்களில் மயங்கி, ஸ்பான்சர்களில்தான் இயங்குகிறது.

காலையில் கண்ணைக் கசக்கும்போதே கார்த்தியும் காஜல் அகர்வாலும் ஒரு காபியைச் சிபாரிசு செய்கிறார்கள். மட்ட மத்தியானம் டி.வி-யைப் போட்டால் 'மேனேஜர்’ கிருஷ்ணமூர்த்தி, டெல்லி கணேஷ், 'ஹோம் ஸ்வீட் ஹோம்’ திவ்யதர்ஷினியெல்லாம் செங்கல்பட்டு தாண்டி நின்றுகொண்டு ப்ளாட் வாங்கச் சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள். சாயங்காலமாகப் புதுப் படம் போடுகிற சாக்கில், 10 நிமிஷத் துக்கு ஒரு தடவை மூன்று விஜய் மொபை லில் பேசி, சரத்குமார் வேட்டி கட்டி நடந்து, தனுஷ§ம் விமலும் ஹேர் ஆயில் தடவி, அஞ்சலியும் தமன்னாவும் குத்து டான்ஸ் ஆடி... 'ஏன்டா வூட்ல இருக்கீங்க..? ஷாப்பிங் போங்கடா’ என வேப்பிலை அடிக்கிறார்கள். நடுநடுவே 'புரட்சிப் போராட்டம்’ என பிரபு நகைக் கடைக்குப் பண்ணுகிற விளம்பரத்தில் சே குவேரா, பகத்சிங்குக்கு எல்லாம் டவுசர் கிழிகிறது. ஊரே தூங்குகிற மிட்நைட்டில் பார்த்தால், தாடை வீங்கிய சஃபாரி பார்ட்டி ஒருவர் வீரிய லேகியத்துக்கு விளம்பரித்துக்கொண்டு இருக்கிறார். இன்னொரு சேனலில் ஒரு கொழுத்த டாக்டரும் கருத்த காம்பியரும் 'இதாங்க அமுக்ரா லேகியம்...’ எனக் கடுப்படிக்கிறார்கள். பின்னிரவுக்குப் பின்னும் ஒரு வெள்ளைக்காரிக்கு சிந்தாதிரிப்பேட்டை பெண்ணை டப்பிங் பேசவிட்டு, வீட்டுப் பொருட்களை விற்றுக்கொண்டு இருக்கிறார்கள். தொப்பையைக் குறைக்க டிப்ஸ் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். உச்சகட்டமாக சிட்டி முழுக்க 'சினேகா-பிரசன்னா பிரிவுக்கு என்ன காரணம்..?’ என போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்கள்.

இருக்கிற பிரச்னையில் இது வேறா என எனக்கு போஸ்டரைப் பார்த்ததுமே வேர்த்தது. சொல்லிவைத்தது மாதிரி, ''என்ன பாஸு... சினேகா - பிரசன்னா பிரிஞ்சுட்டாங்களா? மேட்டரு நெஜமா பொய்யா? என்ன பிரச்னையாம்? நீ சினிமாக்காரன்தான? தெரியும்ல...'' என அடுத்தடுத்து போன்கள். ''இதெல்லாம் எதுக்குரா எங்கிட்ட கேக்குறீங்க..? சினிமாக்காரன்னா... சினேகா-பிரசன்னா வூட்ல செக்யூரிட்டியாவா இருக்கேன்? நானே பல பிரச்னைகள்ல சுத்திட்டு இருக்கேன்... நூத்தி எட்டுல போன் பண்ணிக் கேளுங்கடா...'' எனக் கடுப்பானேன். என் அண்ணிதான் சாப்பாடு போடும்போது சொன்னார், ''தம்பி... அது ஆடி மாசம் வருதுல்ல... அதுக்குத்தான் விளம்பரத்துக்கு அப்பிடிப் போட்ருக்காங்க!'' எனக்கு, 'இதெல்லாம் யாரு, எங்க உக்காந்துய்யா யோசிக்கிறது..?’ என ஆச்சர்யமாக இருந்தது. அதன் பிறகு மொத்த மீடியாவும் சினேகா-பிரசன்னாவைச் சுற்றி வளைத்து இந்த விளம்பரத்தைப் பற்றிக் கேள்விகள் கேட்க, அவர்களும் ஏகப்பட்ட விளக்கங்கள் கொடுக்க... அது செம ஹிட். எனக்கு எதற்கு இவ்வளவு விளக்கங்கள் எனத் தோன்றியது. இதற்கான பதிலையெல்லாம் அன்றே ஒரே வரியில் சொல்லிவிட்டானே தானைத் தலைவன் செந்தில்... 'ஒரு வெளம்பரம்!’

20 வருடங்களுக்கு முன்பு வரை, அம்பாஸிடர் காரில் மைக் கட்டிக்கொண்டு வருவதுதான் எங்கள் ஊரின் அதிகபட்ச விளம்பர யுத்தி. அப்படி எம்.ஏ. தமிழ் படித்த அண்ணன் சரவணனை மகாராஜா சில்க்ஸுக்கு பிராண்ட் அம்பாஸிடராகப் போட்டார்கள். 'மகாராஜா சில்க்ஸ்... தென்றலின் முதல் வரி, வசந்தத்தின் முகவரி... மகாராஜா சில்க்ஸ்’ எனக் கரகரவெனக் கவிதை எழுதி, மைக்கில் கூவியபடி அண்ணன் அண்ட் கோ வரும். நாள் முழுக்க கவிதையாகப் பொழிந்துவிட்டு, ராத்திரி 150 ரூபாய் பணமும் சாந்தி கடை பரோட்டாவுமாக முடியும் அந்த செஷன். 'ஜெமினி சர்க்கஸ்... குட்டி யானையின் சாகஸம் காணத் தவறாதீர்கள்... திலகர் திடலில் மாலை ஆறு மணி முதல் குடும்பத்தோடு கண்டு களிக்க... ஜெமினி சர்க்கஸ்...’ என அடுத்த ரவுசு ஆரம்பிக்கும்.

'' 'உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வந்தப்பலாம் ஆட்டோல மைக் கட்டிக்கிட்டு உங்க மாமன்தான் சுத்துனான். ஊருக்கு ஊர் நோட்டீஸ் போட்டே வெள்ளி விழா பாத்தாங்கள்ல... 'ஆட்டுக்கார அலமேலு’ வந்தப்ப ஊர் ஊரா அந்த ஆட்டைக் கொண்டுவந்தாங்க... கும்போணம் விஜயால கொண்டுவந்து நிப்பாட்னப்ப அப்பிடி ஒரு கூட்டம்... 'கூலிக்காரன்’ வந்தப்ப விஜயகாந்து வண்டி இழுக்குற மாரி தங்க கலர்ல செல செஞ்சி தேட்டருக்கு தேட்டர் வெச்சாங்க... 'ஆடிவெள்ளி’க்கு எங்க பாத்தாலும் அம்மன் செலையா வெச்சாங்க... இப்பல்லாம் அந்த ஹீரோ, ஹீரோயினே தியேட்டர் தியேட்டரா வந்தாக்கூட பாக்க ஜனம் வர மாட்டேங்குதே... அதான் டி.வி-ல எப்போ பாத்தாலும் வெளம்பரமா பாத்துக்கிட்டு கெடக்குல்ல...'' என்றார் ரவி சித்தப்பா.




உண்மைதான்! இப்போதெல்லாம் விளம்பரங்கள் 'சீ’ பட்டுவிட்டன. ஊரில் குழந்தை பிறந்த நாள், பூப்பு நீராட்டு விழா தொடங்கி எழவு வரைக்கும் எல்லாவற்றுக்கும் ஃப்ளெக்ஸ் பப்ளிசிட்டி பின்னிப் பிரிக்கிறது. லோக்கல் கேபிளைத் திறந்தால் 'புலி உறுமுது... புலி உறுமுது’ பாடல் பின்னணியில் ஒருவர் நடந்து வர, 'அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்கிறார்கள். 'மாசமா... ஆறு மாசமா...’ பாடலில் இருவர் கை கோத்து நிற்க... கல்யாண வாழ்த்து சொல்கிறார் கள். இன்னொரு பக்கம் நெட்டில், மொபைலில் ஷூட் பண்ணி தெரு முக்கில் எடிட் செய்யப்பட்ட ஏகப்பட்ட வீடியோக்களை ஏற்றி கேப் விடாமல் ரகளை பண்ணுகிறார் கள். ஆளாளுக்கு விளம்பரத்தில் இறங்கி விட்டதால் பலருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதனாலேயே கிசுகிசு கிளப்பிவிடுவது, லிப் கிஸ் அடிப் பது, அரை நிர்வாண போஸ் கொடுப்பது என சினிமா விளம்பரங்களின் எல்லை எகிறிக்கொண்டே இருக்கிறது.

சென்னை வந்த புதிதில் வேலை இல்லாததால், ஓவியரான செல்வம் சித்தப்பாவைப் பார்க்க தினமும் போய்விடுவேன். சித்தப்பா ஒரு விளம்பர பேனர் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது ஹோர்டிங்குக்குஎல்லாம் தடை இல்லை. கையால் விளம்பர போர்டுகள் எழுதும் வேலைகளுக்குக் கிட்டத்தட்ட இறுதிக் காலகட்டம்போல் இருந்தது அப்போது. மவுன்ட் ரோட்டில் மிகப் பெரிய ஹோர்டிங் ஏற்றி, சாரம்கட்டி நள்ளிரவில் நாலைந்து பேர் தொங்கிக்கொண்டு வரைந்துகொண்டு இருப்பார்கள். எனக்கு அந்தக் காட்சியைப் பார்க்கும் கணம் பக்கென்று இருக்கும். உடல் முழுக்க பெயின்டோடு அதிகாலை யில் கீழே இறங்கி கையைத் துடைத்துக்கொண்டு இருப்பவர்களை அவ்வளவு ஆச்சர்யமாகப் பார்த்திருக்கிறேன். அப்புறமாக அந்த வழியாக வரும்போது பளபளவென அந்தப் பலகை நிற்பதையும் ஏராளமான விழிகள் அதைப் பரவசமாகப் பார்த்துப் போவதையும் காணும்போது ஒவ்வொரு விளம்பரத்துக்குப் பின்னும் இருக்கும் பெயர்தெரியா உயிர்களை நினைத்துக்கொள்வேன். அப்புறம் எல்லாம் கம்ப்யூட்டர் மயமாகிவிட்டன. 'சிப்பி டெய்லர்’ போர்டில் மைக்கேல் ஜாக்சனை அவ்வளவு நளினமாக வரைந்து வைத்தவரும், 'மணி சலூன்’ போர்டில் ரகுவரனைத் தேர்ந்தெடுத்து வரைந்து வைத்தவரும், 'நளினி சில்க்ஸ்’க்கு மாதவி முகத்தை உதட்டுச் சுழிப்போடு அப்படி ஒரு காவியமாக வரைந்து வைத்தவரும் 'விடியல் இசையக’த்துக்கு ராஜாவையும் ரஹ்மானையும் கறுப்பு வெள்ளை ஆர்மோனி யக் கட்டைகளாலேயே வரைந்தவரும் இப்போது எங்கிருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்?

நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு 'பவர் ஸ்டார்’ இருக்கிறார். அவரவரின் எல்லைக்கு உட்பட்டு ஏதேனும் ஒரு விளம்பரம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது. அடிக்கிற கலரில் பூப்போட்ட சட்டை போட்டுக்கொண்டு போவதில் இருந்து கன்னத்தை மறைத்து திடீரென 'விருமாண்டி’ மீசைக்கு ட்ரை பண்ணுவது வரை ஏதேனும் கவன ஈர்ப்பு தேவைப்படுகிறது. நடுரோட்டில் நாய் குரைக்கிற மாதிரி பைக் ஹாரன் வைத்துக்கொண்டு பறக்கவைக்கிறது. ஒவ்வொரு நகத்துக்கும் ஒவ்வொரு கலரில் நக பாலீஷ் போட்டு, லோ-ஹிப்பில் பெல்லி ஸ்டட் போட வைக்கிறது. உப்பு பெறாத விஷயத்தை எல்லாம் மணிக்கணக்கில் பேசவைக்கிறது. புதிதாக லாஞ்ச் ஆகியிருக்கிற மாமரத்து மாரியம்மனைப் பிரபலமாக்க, மரமெல்லாம் பால் வடிவதாகக் கிளப்பிவிட வைக்கிறது. கடவுள் வரைக்குமே ஒரு 'பவர் ஸ்டார்’ டச் தேவைப்படுகிறது.

''திறமையெல்லாம் விடுப்பா... அவன் மார்க் கெட்ல புலிக்கரடி... அரை மணி நேரம் பேசினான்னா அவனையே வித்துருவான். விளம்பரம் பண்ணிக்குறவன்தான் தடதடனு முட்டித் தூக்கிட்டுப் போயிட்டே இருக்கான்...'' எனப் புலம்பும் எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள்? இங்கே மரம் நடுவதைச் சொல்வதற்குக்கூட விளம்பரங்கள் வேண்டி இருக்கிறது இல்லையா?

ஒரு முறை திருவண்ணாமலை போயிருந்தபோது, மலை உச்சியில் குடிசை போட்டு வசிக்கிற நாராயண சாமியைப் பார்க்க நண்பர் அழைத்துப் போனார். ஏழெட்டு கிலோ மீட்டர்போல மூச்சிரைக்க ஏறி அவர் குடிசையை நெருங்கும்போது எங்களை நோக்கி 'சரேல் சரேல்ல்ல்’ எனக் கற்கள் பறந்து வந்தன. தெறித்து ஓடி பதுங்கிக்கொண்டோம். ''சாமி கோவமா இருக்கு... இருங்க...'' என்றார் நண்பர். கொஞ்ச நேரம் கழித்து படுத்த வாக்கில் நகர்ந்துபோனோம். எங்களைக் கண்டதும் பயங்கரக் கோபமாகி, ''டேய்... உங்களையெல்லாம் பாக்க வேணாம்னுதானே இங்க வந்து உக்காந்திருக்கேன்... எதுக்கு வர்ற... போ... போயிரு...'' என சாமி கத்தினார். மறுபடி அவர் கற்களை வீச, கொண்டுபோயிருந்த ஆப்பிளை உருட்டிவிட்டு ஓடிவந்தோம். ''சாமி அப்பிடித்தான்... யாரையும் பாக்கவே விரும்ப மாட்டாரு... அவர்ட்ட திட்டு வாங்குனதே பெரிய விஷயம்...'' என்றார் நண்பர். விளம்பர வெளிச்சமே வேண்டாம் என ஓடி ஒளிகிறவர்களுக்கும் விளம்பரம் கொடுத்துக்கொண்டே இருக்கிறது இந்த உலகம்.

சிதம்பரம் பக்கம் காரில் போய்க்கொண்டு இருந்தபோது, ''இங்க ஒரு பாட்டி இட்லி சுட்டு விக்கும்... செம ஃபேமஸு... வா போவோம்...'' என ஒரு நண்பர் அழைத்துப்போனார். போனால் தெரு ஓரமாக ஒரு பாட்டி இட்லி சுட்டு விற்க, எக்கச்சக்க கூட்டம் கும்மிக்கொண்டு இருந்தது. ''இந்த ரூட்ல போறவங்க வர்றவங்க எல்லாரும் இங்க வந்துருவாங்க. எப்பிடியோ இந்த ருசி பரவி, சென்னை வரைக்கும் பாட்டி ஃபேமஸ் ஆகிருச்சு...'' என்றார் நண்பர். இப்படித்தான் ஒரு முட்டுச் சந்தில் டாக்டர் அருண்பிரசாத் நடத்தும் சின்ன க்ளினிக்கில் அவ்வளவு கூட்டம் எப்போதும் காத்திருக்கும். ஒருமுறை பஸ் ஸ்டாண்ட் ஸ்க்ரீன்களில் போடுவதற்கு ஒரு விளம்பரம் எடுக்கலாமா என அவரிடம் கேட்டதற்குச் சொன்னார், ''அதெல்லாம் வேணாங்க... நம்ம வேலை நல்லாயிருந்தா எல்லாரும் வருவாங்க... இங்க இருக்கறவங்கள்லாம் விளம்பரம் பார்த்துட்டா வந்தாங்க. நம்ம வொர்க்தாங்க நமக்கு விளம்பரம்!''







அன்றைக்கு கோட்டூர்புரத்தில் இருந்து ஆட்டோவில் வந்துகொண்டு இருந்தபோது வழியில் மெட்ரோ ரயில் வேலைகளுக்காகப் போட்டு இருக்கும் இரும்புப் பலகையெல்லாம் போஸ்டர்கள். அதில் இருந்த வாசகங்களைப் பார்த்ததும் ஃப்ரீஸாகிவிட்டேன். 'கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே... ஒரு லட்சம் கோடி ஊழல் சதியை உடைத்துவிட்டு வெளி வந்த அண்ணனே...’ என அடிக்கப்பட்ட போஸ்டரில் கோட் சூட்டில் அந்த அரசியல் புள்ளி 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ சூர்யா மாதிரி நிற்கிறார்.

உடனடியாக செந்திலின் கீச்சுக் குரல் கேட்டது... 'ஒரு வெளம்பரம்..!’



- போட்டு வாங்குவோம்...

Courtesy:: வட்டியும் முதலும் - ராஜு முருகன்   

Saturday, June 8, 2013

அரசியலுக்கு அடுத்த விஜயகாந்த்.

கையில மண்ணே ஒட்டாமல் 
செடி நடுகிறார் நடிகர் விஜய்...
சமூக அக்கரையா'மா...
#அரசியலுக்கு அடுத்த விஜயகாந்த். ___NK_


திமுக'வினரின் தமிழ் பற்றின் மற்றுமோர் அடையாளம்
























எண்ட அம்மே.... ஞ்யான் பாலக்காடு நாயராக்கும்...
எண்ட கட்சி, டிராயர் முன்னேற்ற கழகமாக்கும்...

#உண்மையில் இந்த திராவிட டிராயர்கள் தான் 
தமிழை வாழவைப்பார்களா? 

- ஆருத்ரன்^ 

சத்தமில்லாமல் உதவும் அஜித்!!!! [ஏழை மாணவர்களுக்கு 17லட்சத்திற்கு உதவி]

சத்தமில்லாமல் உதவும் அஜித்!!!! [ஏழை மாணவர்களுக்கு 17லட்சத்திற்கு உதவி]





அஜித் என்றாலே அடக்கம், கருணை என்று சொல்லிவிடலாம்! இது பள்ளிகள் திறக்கும் சீசன் என்பதால், சில மாஸ் ஹீரோக்கள் தங்கள் படங்களை நோட்டுப்புத்தங்களில் அச்சடித்து அதை ஏழை மாணவர்களுக்கு வழங்கி விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள். ஆனால் அதில் இதற்கு நேர்மாறான மனிதர்! அஜித்தின் அலுவலகம் அமைந்திருக்கும் ஆர்.ஏ.புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எத்தனை வகுப்புகள் இருக்கின்றன, எத்தனை மாணவர்கள் என்பதை தனது மேலாளாலர் மூலம் கணக்கு எடுத்து வரச் செய்து, அத்தனை மாணவர்களுக்கும், ஏழை மாணவர்கள் வாங்கமுடியாத முதல்தரமான காகிதத்தில் தயாரான ‘கிளாஸ் மேட்’ என்ற நோட்டுப்புத்தகங்கள் வாங்க 17 லட்சம் ரூபாய்க்கு ஆர்டர் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக கொடுத்திருக்கிறாராம். இந்த விஷயம் பள்ளியின் தலைமை ஆசிரியர் வழியே வெளியே கசிந்திருக்கிறது!

அஜித்தின் இந்த அமைதிதான் அவரது பலமே! கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தனது அடுத்தடுத்த படங்களை உடனுக்குடன் திட்டமிட்டு எந்த ஆரவாரமும் இல்லாமல் அவற்றில் நடித்து வருகிறார் தல அஜித்! ஃபாக்ஸ் ஆபீஸில் அஜித்தின் படங்கள் 35 முதல் 55 கோடி வரை குறைந்த பட்ச வசூல் ஈட்டும் படங்களாக இருக்கின்றன. அஜித்தின் மங்காத்தா அதிக பட்சமாக தமிழ்நாட்டில் மட்டுமே 52 கோடி ரூபாய் வசூல் செய்தது! குறிப்பாக அஜித்தை ‘ஓபனிங் மகராஜ்’ என்று விநியோகஸ்தர்கள் சொல்வதுண்டு. இதற்குக் காரணம் அஜித்தின் தோல்விப்படங்கள் கூட முதல் இரண்டு வாரங்களில் 15 முதல் 20 கோடி ரூபாயை ஈட்டிவிடும் என்பதால்தான்! மங்காத்தா முதல்வார முடிவில் 17.8 கோடி வசூல் செய்ததுதான் அஜித்தின் லேட்டஸ்ட் வசூல் சாதனை!


Ultimate Star Ajith
ஃபாக்ஸ் ஆஃபீஸில் இத்தனை செல்வாக்கு இருந்தும் அஜித் தற்போது மல்டி ஸ்டாரர் படங்களில் நடிக்க எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை! அதேபோல புதுமுக நடிகர்களுடனும் அஜித் நடிப்பது, இவரை பந்தா இல்லாத மாஸ் ஹீரோவாக காட்டுகிறது! அதேபோல தயாரிப்பாளரை முடிவு செய்வது மட்டும்தான் அஜித்! ஆனால் இதுவரை இந்த ஹீரோயின் உடன்தான் நடிப்பேன் என்று மறந்தும் அஜித் எந்த இயக்குனரை கேட்டுக் கொண்டதில்லை! கதாநாயகி தேர்வு செய்வதை இயக்குனர் வசமே விட்டுவிடும் அஜித், திருமணத்துக்குப் பிறகு கிசுகிசுக்களிலும் சிக்கியதில்லை! இவை எல்லாவற்றுக்கும் மேலாக அஜித் செய்துவரும் மருத்துவ உதவிகளையும் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்கிறார். சமீபத்தில் ஒரு ஓய்வுபெற்ற ஸ்டண்ட் கலைஞரின் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செலவை காதும் காதும் வைத்தமாதிரி ஏற்றுக்கொண்டிருக்கிறார். அஜித்தின் இப்படி சத்தமில்லாமல் உதவிசெய்வதில் ஒரு வித்தகர்தான்!


-ஆருத்ரன்^