01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Saturday, February 22, 2014

அரவிந்த் கேஜிரிவாலின் தவறான கருத்து - கடும் கண்டனங்கள்

தலையும் புரியாமல், வாலும் புரியாமல், கருத்து கூறியிருக்கும் அரவிந்த் கேஜிரிவாலின் அரசியல் பேச்சுக்கள், மிகவும் அபத்தமானதாக உள்ளது.
நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை மறந்துவிட்டு விமர்சிப்பதிலேயே அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசியல் அனுபவமின்மை பல்லிளிக்கிறது.


ராஜீவ் கொலைக் கைதிகளை விடுதலை செய்தது தவறு என்று உளறியிருக்கும் திரு.அரவிந்த் கேஜிரிவாலுக்கு முதலில் நமது AIS சார்பில் கடும் கண்டனங்கள்;

Tuesday, February 18, 2014

மூடிட்டு போங்க பாஸ் - ராஜீவ்காந்தி வழக்கில் தண்டனையை குறைத்தது தவறா!!?

தப்பினார்கள் அப்பாவித் தமிழர்கள்



சாந்தன், பேரறிவாளன்,முருகன் இவர்கள் தான் ராஜீவ் காந்தியை கொன்றனர் என்று உளரும் அத்தனை முட்டாள்களுக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்பவுது ஒன்றே ஒன்று தான்...

ராஜீவ்காந்தி கொலை உண்மைகள்-சில வருடங்களுக்கு முன் சொன்ன வழக்கறிஞர்


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தப்பித்த உண்மையான குற்றவாளிகள் பலர்…2012இல் வெளியான சில தகவல்கள்

 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினியின் சார்பாக வழக்காடிய, 1970 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும், 69 வயதாகும், திரு  எஸ்.துரைசாமி அவர்கள் எழுதி, வெளிவந்த ஒரு புத்தகம் தொடர்பாக -

Wednesday, February 12, 2014

மானங்கெட்ட விஜய் மல்லையா!!

மானங்கெட்ட விஜய் மல்லையா!!
========================================
யுவராஜ்சிங்குக்கு ஏன் பெரிய தொகை[14கோடி]?
விஜய் மல்லையா பதிலும்!! எமது பதிலடியும்!!
=====================================================

யுவராஜ்சிங் முந்தைய சீசனில், புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார்.அப்போது [2011] 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பு ரூ.11 கோடி) கொடுத்து அவரை புனே அணி எடுத்தது. இப்போது அதையும் தாண்டி யுவராஜ்சிங் சாதனை படைத்திருக்கிறார். ஆகையால் ‘யுவராஜ்சிங்கை வாங்க வேண்டும் என்பதில் எங்கள் அணியின் கேப்டன் விராட் கோலி ரொம்ப ஆர்வமாக இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரூ.4 கோடி (குழப்பம் ஏற்பட்டதை சுட்டிகாட்டி) கூடுதலாக போய் விட்டது.  இவ்வாறு அதிக விலை கொடுத்து எடுத்ததை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளர் தொழிலதிபர் விஜய் மல்லையா கூறினார்.



#எமது_பதில்
==================
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளரான இவரே தான், கிங் பிஷெர் ஏர்லைன்சின் தொழிலதிபர். இந்த  விஜய் மல்லையா தனது தொழிலாளர்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்காமல் இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் குதிரை பந்தையம் போன்ற இந்த ஐ பி எல் போட்டிகளில் இவர் பணத்தை வாரி இரைப்பது, நமக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துகிறது.


ஆம்! உண்மையில் சூடு சொரணை இருந்தால், ஒரு கண்ணில் வெண்ணையும், மறுகண்ணில் சுண்ணாம்பையும் வைத்து நாடகம் ஆடியிருக்க மாட்டார். அவருக்கு பிரச்சனை தான் என்ன? இவர் அரசிடம் வாங்கிய கடன்களில் பல நூறு கொடிகள் இன்னும் திருப்பி அடைக்கப்படவில்லை.

அதிலும் குறிப்பாக RBI அறிவித்துள்ள வாராக்கடன் பெயர்களில் கிங் பிஷெர் ஏர்லைன்ஸ் பெயரும் இருக்கிறது. ஆனால் கிங் பிஷெர் சரக்கு விற்பனை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. நமது வரிப்பணத்தில் இயங்கும் நம்நாட்டு பணத்தையும் திரும்ப தரவில்லை. இந்திய மக்களின் பணத்தில் இயங்கும், வங்கிகளில் வாங்கிய கடனையும் திருப்பி அடைக்கவில்லை. இப்படியான நேரத்தில் நடிகைகளுடன் உல்லாச பயணம், குதிரை பேரம் போன்ற ஏலத்தில் யுவராஜ் சிங்'க்கு அதிக விலை கொடுக்க முடிகிறது. #தூ__மானங்கெட்டவனே, வெட்கமாக இல்லை. அடுத்தவன் காசில் தொந்தி வளர்க்க ;;



-ஆருத்ரன்^

Monday, February 3, 2014

திமுக நான்காம் பாகம்

செப்டம்பர் 17, 1949இல் துவங்கப்பட்ட திமுக என்ற கட்சி சுமார், அரை நூற்றாண்டு வரலாறு கொண்ட கட்சி பல போராட்டங்கள், பல சூழ்ச்சிகள், பல நிராகரிப்புகள் என தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம்  







இதை விட வேறு எப்படியும் பெரியாரை
கேவலப்படுத்தி விட முடியாது. பெரியார்
தன் இறுதி காலம் வரை அனைத்து மதங்களைபும்,
அனைத்து மூட நம்பிக்கைளையும் நேர்படவே
விமர்சித்தவர். அண்ணா'வோ, கருணாநிதி அவர்களோ அப்படி அல்ல, உடையாத பெரும்பான்மை ஓட்டுக்களை நையாண்டி செய்து சிறுபான்மை ஓட்டுக்களை பெரும் அதீத தன்னல/கட்சிநலவாதிகள்.

அழகிரி தொண்டர்கள் என்ன நினைத்து கொண்டு
இதை செய்தனர் என்று தெரியவில்லை. ஆனால் திமுக'வோ தி.க'வோ கருணாநிதி சொத்து அல்ல என்பதை ஒட்டுமொத்த திராவிட குடும்ப உறுப்பினர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இது எப்போதும் பெரியாரின் சுயமரியாதை கொள்கை மற்றும் சமூக நீதி கொள்கைக்கு கிடைத்த மரியாதை அவ்வளவே. அந்த மரியாதையை அன்று முதல்
இன்று வரை, பதவிகளாகவும், சொத்துக்களாகவும்
மாற்றப்பட்டு மாற்றப்பட்டு, மழுங்கி இப்போது
அண்ணன் தம்பி சண்டை என்பதில் வந்து நிற்கிறது.

குடும்பத்திற்காக கட்சியில் மாற்றம் செய்வதும், கட்சிக்காக கொள்கைகளை மாற்றம் செய்வதும்,
நீண்ட நாட்களாவே திமுக'வில் அரங்கேறி வருகிறது!
குடும்ப முன்னேற்றத்திற்காக பல படிநிலைகளை உடைத்த கருணாநிதி-திமுக, மெல்ல மெல்ல உருக்குலைந்து வருகிறது. மேலும் இப்போது நடந்து கொண்டிருக்கும் சச்சரவினால், பெரிதும் பின்தங்கி அழியும் அபாயம் திமுக'விற்கு இருக்கிறது. குறிப்பாக கருணாநிதிக்கு பிந்தைய திமுக'வின் நிலை ஒரு பெரிய கேள்விக் குறியினை தாங்கி நிற்கிறது.

இப்படிப்பட்ட நிலையில், தொண்டர்கள் அறிவார்ந்து எதையும் முன்னிறுத்தாமல் இப்படி சந்தானத்திற்கு
போட்டி போடும் அளவிற்கு காமெடி பேனர்களை
அடித்து, மிச்சம் இருக்கும் கொஞ்சநஞ்ச வாக்கு
வங்கிகளையும் உடைத்து கொள்கின்றனர். இவர்கள் சும்ம்மா இருந்தாலே கட்டுமரம் கரை சேர்ந்துவிடும்.

#ஆருத்ரன்^