01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Tuesday, November 26, 2013

சித்தரும் லிங்கமும் - ஒரு சிந்தனை

சித்தரும் லிங்கமும் - ஒரு சிந்தனை
=========================================


திருவண்ணாமலை கீழே உள்ள அடி அண்ணாமலை கோவிலுக்கு உள்ளே சென்றால் ஒரு மெல்லியதான அதிர்வை உணர முடியும். இது பூமிக்கு உள்ளே உள்ள நெருப்பு குழம்பினால் (லாவா) ஏற்படும் மாற்றங்களினாலோ அல்லது பூமி பரப்பில் (earth crust) ஏற்பட்டு கொண்டிருக்கும் மாற்றங்களினாலோ இந்த அதிர்வுகள் ஏற்பட்டு கொண்டு இருக்கலாம். இந்த இடத்திற்கும் திருவண்ணாமலை (Hills) உருவானதற்கும் தொடர்பு இருக்கலாம். இந்த இடங்களில் நெருப்பு குழம்பு வந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது.

பஞ்ச பூதங்களில், அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை சொல்ல படுகிறது. இந்த இடங்களில் அக்னி குழம்பு வெளியேறி அது மூலமாக இங்கே உள்ள மண்ணில் உலோகங்களும், தாதுக்களும் அதிகமாக இருக்கிறது.. இங்கு உள்ள உலோகங்களையும், தாதுக்களையும் அருகே உள்ள செடி கொடிகள் எடுத்து கொண்டு அவைகளை உருமாற்றி தனக்குள்ளே கொண்டிருப்பதால் இந்த செடி கொடிகள் மருத்துவ குணங்களை கொண்டு மூலிகைகளாக உள்ளன. எனவே சித்தர்கள் உலோகங்களையும், தாதுக்களையும், மூலிகைகளையும் ஆராய சிறந்த இடமாக திருவண்ணாமலையை தேர்வு செய்து உள்ளனர். இவற்றில் பத்ரகிரி மிக மிக முக்கியமான இடமாகும்.

இது போன்ற இடங்களில் உள்ள செடி கொடிகள் (exotic/medicinal plants) அங்கே கிடைக்கும் உலோகங்களையும், தாதுக்களையும் எடுத்து உருமாற்றம் செய்தோ அல்லது அதன் நச்சு தன்மையை குறைத்தோ தனக்குள்ளே சேமித்து வைத்து, மருத்துவ குணங்களை கொண்ட மூலிகை ஆகிறது. இந்த தத்துவத்தை உணர்ந்து கொண்ட சித்தர்கள் இதை மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து தாவரங்களை பயன் படுத்தி உலோகங்களை உருமாற்றி மருந்துகளாக உபயோக படுத்தும் முறைகளை கண்டு அறிந்தனர். எனவே உலோகங்கள், தாதுக்கள், மூலிகைகள் நிறைந்த இடங்களை தேர்வு செய்து அங்கேயே தங்கி தமது ஆராய்சிகளை செய்தனர்.

பூமிக்கு வெளியே சிறிய அளவொ, பெரிய அளவொ நெருப்பு குழம்பு வெளியே வந்து வழிந்து குளிரும் போது அது லிங்க வடிவில் பாறையாக அமையும். இதுவே லிங்கம். இந்த லிங்கத்தை சுற்றி உள்ள மணற் பரப்பில் உலோகங்களும், தாதுக்களும், மூலிகைகளும் நிறைய இருக்கும். லிங்க வடிவை சிவனே முதலில் கண்டுபிடித்து உபயோக படுத்தபட்டதால் சிவலிங்கம் என பெயரிட பட்டிருக்கலாம்.

இதே நடைமுறையால் எங்கெங்கு உலோகங்களொ அல்லது தாதுக்களோ அல்லது மூலிகைகளோ இருக்கும் இடங்களில் லிங்கங்களை வைத்தனர். இது ஒரு சித்தர் அடுத்த சித்தருக்கு ஆராய்சி செய்யும் இடமாக காண்பிக்க உபயோகப் பட்டது. எங்கெங்கு லிங்கங்கள் உள்ளதோ அங்கு குடிலொ, மண்டபங்களோ உருவாக்க பட்டது. இது லிங்கங்களை சிதையாமல் காப்பாற்றவும் இங்கேயே தங்கி ஆராய்சிகளை மேற்கொள்ளவும் உபயோகப் பட்டது. இவற்றில் சில கோவில்களாகவும் மாறியது.

இந்த லிங்கங்களை தேய்வதில் மற்றும் சிதைவதில் இருந்து பாதுகாக்கவும், குளிர வைக்கவும் அதன் மேல் நீர், பால், தேன் போன்ற திரவங்களை தொடர்சியாக ஊற்றி லிங்கங்களை பாதுகாத்து வந்தனர். தேனில் உள்ள மெழுகு இந்த லிங்கங்களை கறையாமல் பாதுகாக்க உதவியது. இதுவே அபிஷேகம் ஆகும். இது போலவே பின்னாளில் உருவாக்கப் பட்ட கற் சிலைகள் பாதுகாக்க பட்டது.

இந்த லிங்கம் மற்றும் சிலைகளின் மீது அபிஷேகங்கள் செய்யும் போது வழியும் திரவங்களோடு சிலைகளில் இருந்து நுண்ணிய துகள்கள் கலந்து வரும். இதன் மருத்துவ குணங்களை அறிந்து சித்தர்கள் இந்த நீரை மக்களுக்கு அபிஷேக நீராக அருந்தும் பழக்கத்தை உருவாக்கினர்.
 
இது போன்ற இடங்களை சுற்றி உள்ள மருத்துவ பலன்களை, மக்கள் அடைய இந்த இடங்கள் கோவில்களாக்க பட்டது இது போனற கோவில்களுக்கு மக்கள் சென்று வரும் பழக்கங்கள் உருவாக்க பட்டன.

உலோகங்களையும், தாதுக்களையும், மூலிகைகளையும் ஆராய்ச்சி செய்து உருவாக்கப்பட்ட மருந்து மற்றும் உணவின் நச்சு தன்மை அறிய காக்கைக்கு வைத்து பரிசோதிக்க பட்ட்து. இந்த acute poisoning   கண்டு அறிய காக்கைகள் பெருமளவில் பயன்படுத்த பட்டது. நாளடைவில் இந்த பழக்கமே உணவுக்கு முன் காக்கைகளுக்கு உணவு வைக்கும் பழக்கமாக உள்ளது.

Via >> http://www.sindhippom.blogspot.in

Thursday, November 14, 2013

விபரம் தெரியாமல் உளரும் பசில் ராஜபக்சே'வுக்கு AISஇன் பதில்

ஆசியாவிலேயே தமிழகத்தில்தான் வறுமை அதிகம் -
 உணவுக்கே வழியில்லை: பசில் ராஜபக்சே



## எங்களுக்கு தெரியும்... நீ கொஞ்சம் மூடு.. இரக்கமற்றவனே!!
அங்கே அப்பாவி தமிழ் மக்களை கொன்றுவிட்டு, இங்கே
தமிழ் நாட்டு மக்கள் மீது கரிசனமா!! முதலைக் கண்ணீர்
வடிக்கிறாயா!! ஏமாற நாங்கள் ஒன்றும் ஈழ தமிழர்கள் அல்ல!!

தெரிந்து கொள்!!

*ஒருங்கிணைந்த இந்திய துணை கண்டத்தின்,
ஆட்டோ மொபைல் மாநகரமான சென்னையை கொண்டது - தமிழ்நாடு!

*இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெருவாரியாக
முதல் ஐந்து இடத்தில் எப்போதும் இருப்பது - தமிழ் நாடு!

*RBI(Reserve Bank of India) அளித்துள்ள பொருளாதார அடிப்படை தரவரிசையில் இந்தியாவில் மூன்றாவது முன்னேறிய மாநிலம் - தமிழ்நாடு!

*HDI என்று சொல்லப்படும்  அத்தனை வசதிகளுடன் மனிதர்கள் வாழத்தகுதி பெற்ற மாநிலங்களின் தரவரிசை விகிதாச்சாரங்களில் 6வது இடத்தில் உள்ளது
[http://en.wikipedia.org/wiki/Tamil_Nadu]

*தமிழர்களின் நிறுவனங்கள் இந்தியா சிமென்ட், டிவிஸ்,
ஸ்பைஸ் ஜெட், சன் குழுமம், அசோக் லேலான்ட்.....etc
இவைகளின் நிகர ஆண்டு வருமானம், இலங்கை அரசின்
ஒட்டுமொத்த வருமானத்தை விட அதிகம்

*இன்னும் பலபல பொருளாதார மற்றும் வரலாற்று பெருமைகளை கொண்டது என் தாய்தமிழ்நாடு., எங்களின் மாகணத்தில் மூன்றில் ஒரு
பங்கு கூட கிடையாத இலங்கையில் இருந்து கொண்டும், சொந்த
மக்களையே அகதிகளாக வைத்து ஆட்சி நடத்தும் இனவெறி நாட்டில்
இருந்து கொண்டும், எங்களை விமர்சிக்க வேண்டாம்... மடையனே!!

-ஆருத்ரன்^

Monday, November 4, 2013

ஈழத்திற்கு தீர்மானம் போட்ட அரசே அதை முடக்குகிறதோ!!??

மனவலி உணர்வுகள்::
==========================



தமிழக சட்டசபையில் போடப்பட்ட தீர்மானதிற்க்காகவும், அந்த தீர்மானத்தை பரப்புரை செய்யவும், சுடர் பயணம் மேற்கொண்ட தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பினரை, தீர்மானம் போட்ட இந்த அரசின் காவல் துறையினரே கைது செய்து பயணத்தை முடக்கினர்.

பின்பு இந்த அரசு  யாருக்காக எதற்காக தீர்மானம் போட்டது. முழுக்க முழுக்க சமாதான நடவடிக்கைக்காக மட்டுமே மாநில அரசே இப்படி நடந்து கொள்ளும் போது, இந்த மாநில திராவிட அரசு எப்படி மத்திய அரசினை குறை கூற முடியும்!! தனது தவறுகளை மறைத்துக் கொள்ளவே பிறரை குறை கூறும் செயல்களில் நிகழ்கால அரசுகள் ஈடுபடுகின்றன
 என்று விடியுமோ இந்த தமிழ் மக்களின் நிலை!!

- ஆருத்ரன்^

திராவிட அரசியல் துரோகத்தின் விளிம்பு!!

ஓர் துரோகத்தின் விளிம்பு!!
==================================



மனித இனத்தில் தனி நாடு, தனி இனம், தனி மொழி, தனி மதம், தனி சாதி என தனித்து பிரிப்பதுவே ஒருவகையில் முறையற்ற உலக அரசியல் என்று உணர்கிறேன். அதில் அதிக உடன்பாடும் எனக்கில்லை.

ஆயினும், ஒரு பிராந்தியத்தின் ஒரு பகுதி மக்களை மட்டும் தனித்து பிரித்து வேறு இனமாக கூறி, அவர்களை சித்ரவதை செய்வதை சிங்கள பேரினவாத
அரசு ஒரு வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதை அறிந்த பல தாய் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் பலர் அதை தங்கள் போராட்டங்கள் பலவற்றிற்கு அழுத்தம் கொடுக்க பயன்படுத்தி கொண்டனர். இலங்கை தமிழர்களைப் போல் தமிழ்நாட்டு தமிழர்களும், அதுபோன்ற அரசியல்வாதிகளை பெருவாரியாக நம்பினர். அந்த நம்பிக்கைகளை ஓட்டாக்கி அதில் மச்சான்,மகன், மகள் என அனைவருக்கும் பதவியளித்த ஒருவரை அரசியல் சாணக்கியன் என்று அழைக்கும் திராவிடர்கள்.

அங்கு வன்கொடுமை செய்து கொல்லப்படும் ஓர் பகுதி மக்களை காப்பாற்ற வாய்ப்பே இல்லாமல் ஆயுதமேந்தி தன் குடும்பம்,உறவுகள் அனைத்தையும் இழந்த ஓர் தலைவனை திராவிட கட்சியை சார்ந்த பல தமிழர்களை தீவிரவாதி என்றும் சொல்லத் தூண்டுவது, வந்த வழியை மறக்கும் முடர்கள் குணம். ஆதாய அரசியலில்
மூடர்களையும், சுயநலக்காரர்களையும் பிரித்தறிதல் மிகவும் கடினம் என்பதை உணர்ந்த மக்களால் மட்டுமே
உணரமுடிகிறது; மக்களுக்கு உழைத்து மக்களுக்காக இறந்த மாமனிதன் யார் என்பதும்;; [போர் நடந்து கொண்டிருந்த போது கூட] குடும்பத்திற்காகவும், மகளின் பதவிக்காகவும் போராடிய துரோகி யார் என்பதும், உண்மைகள் ஓர் வெளிச்சம் பெறும்.!! :(

#ஆருத்ரன்^