தெளிவற்ற வெளியுறவு கொள்கையினால் அரசின் அனாவசிய செலவுகள்!!

அதாவது இந்தியாவில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதுவர்களையும் அழைத்து பின்வரும் ஐந்து முக்கிய குறிக்கோள்களை தெரிவித்துள்ளார் மன்மோகன் சிங்.
அந்த குறிகோள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,
*இந்திய வளர்ச்சிக்கு உதவக் கூடிய சர்வதேச
சூழலை உருவாக்குவது
*உலகமய சூழலுக்கு ஏற்றாற்போல் இந்திய
பொருளாதார சூழலை மாற்றுதல்
*உலகின் வல்லரசு நாடுகளுடனான உறவை
மேம்படுத்துதல்
* அண்டை மற்றும் தெற்காசிய நாடுகளுடன்
உறவை மேலும் வளர்த்துக் கொள்ளுதல்
*இந்தியாவின் உள்நாட்டு சூழலை சர்வதேச
இலக்குடன் ஒருங்கிணைப்பது
மேற்கூறிய இந்த நல்ல குறிக்கோள்களை இந்த 9 ஆண்டுகளில் ஏன் தீவிரமாக பின்பற்றவில்லை என்பதுவே நமது கேள்வி. உண்மையில் இங்கு நடந்து கொண்டுள்ள காங்கிரஸ் ஆட்சி, உள்நாட்டு உற்பத்திகளையும், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி தரத்தினையும் எவ்வளவு மெருகேற்றியிருக்கிறது என்பதை டாலருக்கு எதிரான ரூபாய் வீழ்ச்சியிலேயே அறிந்திருக்கலாம். ஒவ்வொருமுறை ரூபாய் மதிப்பு வீழும் போதும் உலக பொருளாதாரத்தை குற்றம் சாட்டும் காங்கிரஸ். அதே உலக பொருளாதார பின்னடைவால் கரன்சி மதிப்பு குறைந்த மற்ற எந்த வளரும் நாட்டையும் அடையாளம் காட்டவில்லை. இவையெல்லாம் டாலர் மதிப்பை உயர்த்தி காட்ட அவர்கள் செய்யும் நாடகமே!! மேலும் வெளிநாட்டு பயணங்களாலேயே சர்வதேச அளவில் நமது பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி விடலாம் என்ற நினைத்தோ என்னவோ பல நூறு கோடிகளை வெறும் பயணங்களுக்காக மட்டுமே அழித்து தீர்த்துள்ளது, நமது இந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு.

மேலுள்ள குறிக்கோள்களில் கடைசி கொள்கையை நிறைவேற்ற இதுவரை எத்தனை ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்துள்ளது காங்கிரஸ் அரசு.
கூர்ந்து கவனித்தால் தெரிந்து கொள்ளலாம், அதாவது இதுவரை உள்நாட்டு சூழலை காத்துவரும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் நிலையை உருக்குலைக்கும் நடவடிக்கைகளிலேயே இந்த அரசு ஈடுபட்டுள்ளது. 2Gஅலைக்கற்றையில் விடயம், நிலக்கரி ஊழல், தோரியம்,தாதுமணல், மற்றும் இன்னும் பல விடயங்களில் உள்நாட்டு சூழலை ஊறுகாயாய் கூட காங்கிரஸ் அரசு நினைத்து பார்க்கவில்லை.

எத்தனை இழப்புகள் இந்த இந்திய துணைக்கண்டத்திற்கு, ஏற்கனவே மேற்கத்திய நாடுகளிடம் நமது பல வளங்களை அடிமையாக இருந்து இழந்தோம். ஆனால் இப்போது சுதந்திர சனநாயகம் எனும், அடிமை பத்திரம் கொடுத்து மீதமுள்ள நமது பல இயற்கை வளங்களை கரன்சி மதிப்பு என்ற போர்வையிலும், உலக வங்கி கடன் என்ற போர்வையிலும் அபகரித்து வருகிறது. இப்படி இத்தனை இழப்புகளுக்கும் நடுவில் வாழும் நாம், நமது அடிப்படை உரிமைகளை கடமைகளை மறந்து விடாமல், மக்கள் வரிப்பணத்தை அனாவசியமாக் செலவழிக்கும் எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் முகத்தின் நேர் செல்லும் கூர் சொல்வோம்!!
-ஆருத்ரன்^
No comments:
Post a Comment