01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Monday, December 9, 2013

பிற நாட்டு கார்பரேட் வியாபாரகளின் வியாபார உக்தி!!

உலக அழகி மற்றும் அகில அழகிகள் போட்டிக்கான உலக வல்லரசுகளின் தந்திரத்திலிருந்தே இந்த விடயத்தை அணுகுவோம்!!



2012க்கான உலக  அழகி பட்டத்தினை இந்த ஆண்டு முதன் முறையாக சீன ஷாங்காய் பெண் பெற்றுள்ளதாக பெண்களுக்கான "பெமினிஸ்ட்" புத்தகத்தில் படித்தேன்!!

# இதில் ஒரு ஆழமான வியாபார தந்திரம் ஒளிந்துள்ளது. பிற நாட்டு பொருட்களை எளிதில் நம்பி வாங்கும் மடையர்கள் இந்தியர்கள் என்பது மேற்கத்திய நாட்டு உற்பத்தியாளர்களின் நேர்மையான சிந்தனை. ஆனால் தற்போது சீனர்களும், பிலிப்பைன்ஸ்,கொரிய நாட்டு மக்களும் அந்த வரிசையில் இணைந்துள்ளனர். விலைமிக்க ஆடம்பர காஸ்மெட்டிக் பொருட்களை பெரிய கார்பரேட் நிறுவனங்கள் மக்கள் அடர்த்தி மிக்க பகுதிகளில் விற்பனை செய்ய பல கொடிகளை முதலீடு செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியே 2007 மற்றும் 2012இல் சீன பெண். இப்போது 2013இல் பிலிப்பைன்ஸ் பெண்... அடுத்து தாய்லாந்து பெண் அல்லது இந்தோனேசிய பெண்ணாக இருக்கலாம்!!

பல கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் கவனத்தை ஒரு பெண்ணின் மீது கொண்டு வந்து பின்பு அவரை முன்னிலை படுத்தி விளம்பரம் செய்து வியாபாரம் செய்யும் நோக்கமே... இந்த பெரு முதலாளிகளின் நேர்த்தியான சிந்தனை அது கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக திறம்பட இயங்கிவருகிறது!!

பணக்கார இந்தியர்களும், பெருவாரி சீனர்களும் கூட சமீப காலங்களில் தரவாய்ந்த அமெரிக்க மற்றும் மேற்கத்திய  பொருட்களை பயன்படுத்து கின்றனர். ஆனால் நாமோ தரம் குறைந்த சீன பொருட்களை வாங்கி அவர்களது வியாபாரத்தை ஊக்குவிக்கிறோம். இது அரை நூற்றாண்டுகளாக தொடர்ந்ததன் விளைவாக சீனர்கள் தங்களது தரம் குறைந்த பொருட்களை இங்கே தள்ளி, நம்மை ஒரு வகை சோதனை எலிகளாக்கி, அதன் மூலம் கிடைத்த உபரி வருமானத்தை வைத்து மித ரக தரத்தில் பொருட்களை தயாரிக்க துவங்கிவிட்டனர். இதனால் தான் ஆரம்பத்தில் மோசமாக இருந்த சீன பொருட்கள் தற்போது, சுமாரான நிலையை அடைந்துள்ளது. இனி வரும் காலங்களில் நமது வாங்கும் திறன் அதிகரிக்க அதிகரிக்க சீன பொருட்களின் தரம் இப்படியாக உயர்ந்து கொண்டே சென்று அவர்கள் ஏற்றுமதி பொருளாதாரமும் தன்னிறைவு பெறும். ஆனால் நமது பொருளாதாரம் என்னவாகும் என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்!!

நாம் இப்போது செய்யவேண்டியது ஒன்றே ஒன்று
தான் முடிந்தவரை அத்தனை துறையிலும் இந்திய தயாரிப்புகளை வாங்கிட வேண்டும். மித ரகமாக இருந்தாலும் கூட நமது நாட்டு தயாரிப்புகளையே நாம் வாங்கும் போது., சிறு தொழில்முனைவோர் பெரிதாக ஊக்குவிக்கப்பட்டு நிறைவான, மிக தரமான பொருட்களை உற்பத்தி பண்ணும் வாய்ப்பு மிக இயல்பாக ஏற்படும்!! நமது மக்கள் தொகை பலத்தை பிறர் பயன்படுத்தும் முன்பு அது முதலில் நமது சகோதரர்களுக்கு உதவட்டும். ஆகையால் முதலில் நம்மவர்களை நாம் ஊக்குவிப்போம். மேலும் நமது தயாரிப்புகளில் தரமான பொருட்களுக்கு நாம் அதிக முன்னுரிமை கொடுக்கும் போது அனைவரும் நல்ல தரமான உற்பத்தி பொருட்களை கொடுக்க முன்வருவர்!!

- ஆருத்ரன்^

No comments:

Post a Comment