இந்த அவமானம் நமக்கு தேவையா....என்று நம்மை நாமே
கேட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்;
"வணக்கம் சென்னை"ன்னு சீன் போட்ற
சென்னைவாழ் சிருசுங்களே...பெருசுங்களே!!
பல்லாயிரம் கோடி செலவழித்து கட்டிய அந்த
கட்டிடம் சில ஆண்டுகளுக்குள்ளேயே இடிந்து
விழுகிறது என்றால் பலர் அதில் கேடி வேலை
பார்த்திருக்க கூடும் என்ற விடயம்...ஆணி
அடித்தாற்போல் புரிகிறது...
சென்னை மீது ஈடுபாடு கொண்டுள்ள அத்தனை பெருசு,இளசுகள்
அனைவரும் 6வது முறையாக இடிந்து விழும் நமது பன்னாட்டு
விமான முனையத்தின்,இன்றைய நிலையை கடுமையாக ஆட்சியாளர்களுக்கு எதிராக விமர்சனம் செய்யுங்கள்;
இல்லையென்றால் நல்ல விமானம் நிலையங்கள் உள்ள பெங்களூர், ஹைதராபாத் போன்ற மாநகரங்கள் நம்மை முந்திக்கொண்டு
அனைத்திலும் முன்னேறி சென்று விடும்... இதில் குரல் தர
முடியாதவர்கள் குறைந்தது இந்த பதிவை பகிருங்கள்[SHARE IT]
- ஆருத்ரன்^
No comments:
Post a Comment