சமீபத்தில் தீவன ஊழல் வழக்கில் சிக்கி குற்றவாளியென உறுதி
செய்யப்பட்ட லல்லு பிரசாத் யாதவ் போல , நாடு முழுவதிலும்
மொத்தம் 1420 பேர் சிக்கியுள்ளனர். அதில் எம்.பி.க்கள்-162 ,
எம்.எல்.ஏ.க்கள்-1258பேர் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல்,
நில அபகரிப்பு, லஞ்சம் போன்ற குற்றவழக்குகளில் சிக்கி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வழக்கு மீதான தீர்ப்புகள்
அடுத்தடுத்து வர உள்ளன. லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய
ஜனதா தளம் கட்சியில் 64 சதவீத எம்.எல்.ஏ.க்கள் குற்ற வழக்கில்
உள்ளனர். லல்லு பிரசாத் யாதவ் மனைவி "ராப்ரி தேவி" மீது 3
வழக்குகள் நிலுவையில் உள்ளது..என்பது குறிப்படத் தக்கது;
குற்றம் புரிந்தவர்களை MP மற்றும் MLAவாக நீடிக்க செய்யும் விடயத்தில்
உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை எதிர்த்து மறுபரிசீலனை செய்த
மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம்...
நாட்டின் உயரிய நீதிமன்றத்தின் நீதியரசர்கள், மிக பொறுமையாக
தெளிவாக ஒருமுறை தீர்ப்பை வெளியிட்ட பின் மீண்டும் மீண்டும்
எவரை காப்பாற்ற காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கிறது
என்று புரியவில்லை...

"குற்றம் சாட்டப்பட்டவர், 90நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து
தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால், அவர் பதவியில் தொடரலாம்;"
என்பதே - மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் 8(4);;; இந்த சட்டத்தின் குறைகளை நிவர்த்தி பண்ணும் வடிவமே நமது உச்சநீதி மன்றம் விதித்துள்ள தீர்ப்பு.. ஆனால் பணம் படைத்த குற்றவாளிகளை காக்கும் பொருட்டு
காங்கிரஸ் அரசு அதை எதிர்த்து அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது...
[அதாவது பழைய மக்கள் பிரிதிநிதித்துவ சட்ட விதி 2 பகுதி 3ஆம்
பிரிவினை மிக தெளிவாக உறுதிபடுத்தியுள்ளது]
கடந்த ஓராண்டில் மட்டும் காங்கிரஸ் அரசு இப்படி 8 முறை அவசர சட்டங்களை இந்திய மக்கள் மீது திணித்துள்ளது.... இப்படி அவசர சட்டங்களால் தான் நாட்டை ஆளவேண்டுமெனில் எதற்கு நீதிமன்றம்?,
எதற்கு நாடாளுமன்றம்? அதில் எதற்கு விவாதங்கள்?!
ஒரு நிரபராதியையோ, நல்லவர்களையோ, காப்பாற்ற காங்கிரஸ் இப்படி போராடி இருக்கிறதா, என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.. தென்னிந்தியாவில் இதுவரை கொல்லப்பட்ட மீனவர்களை காக்க
தீர்க்கமான எந்த நடவடிக்கையும் எடுக்காத காங்கிரஸ் அரசு இந்த அயோக்கியர்களை காப்பதில் இவ்வளவு சிரத்தை எடுத்து கொள்வது
எந்த வகை அரசியல் என்று புரியவில்லை...
இன்று நாட்டில் இருக்கும் நாடாளு மன்றத்தின் 543 உறுப்பினர்களில்,
162 பேர் மீது [32%] கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது..
76 பேர் மீது [14%] கொலை,பாலியல் வல்லுறவு போன்ற கடுமையான வழக்குகள் நடைபெற்று வருகிறது... மேலும் இப்போதுள்ள நமது
அரசியல் கட்சிகளால் நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்தப்பட்ட 74%
[100க்கு 74பேர்] வேட்பாளர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள்..இப்படிப்பட்ட கள்ளர்களையும், போக்கிரிகளையும்
காக்க தான் இந்த காந்திய பெயரை சொல்லும் காங்கிரஸ் கட்சி
முயல்கிறது... திருடனை காக்க திருடன் தானே உதவுவான்...
இப்படியொரு கட்சியிடம் மக்கள் எப்படி இத்தனை ஆண்டுகள்
ஏமாந்தனர் என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி... நமக்கான
மூன்றாவது கட்சி முளைத்து நம்மை முன்னேற்றிட வேண்டும்!!
- ஆருத்ரன் [Thank for the statistics: Dinamani ]
செய்யப்பட்ட லல்லு பிரசாத் யாதவ் போல , நாடு முழுவதிலும்
மொத்தம் 1420 பேர் சிக்கியுள்ளனர். அதில் எம்.பி.க்கள்-162 ,
எம்.எல்.ஏ.க்கள்-1258பேர் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல்,
நில அபகரிப்பு, லஞ்சம் போன்ற குற்றவழக்குகளில் சிக்கி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வழக்கு மீதான தீர்ப்புகள்
அடுத்தடுத்து வர உள்ளன. லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய
ஜனதா தளம் கட்சியில் 64 சதவீத எம்.எல்.ஏ.க்கள் குற்ற வழக்கில்
உள்ளனர். லல்லு பிரசாத் யாதவ் மனைவி "ராப்ரி தேவி" மீது 3
வழக்குகள் நிலுவையில் உள்ளது..என்பது குறிப்படத் தக்கது;
குற்றம் புரிந்தவர்களை MP மற்றும் MLAவாக நீடிக்க செய்யும் விடயத்தில்
உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை எதிர்த்து மறுபரிசீலனை செய்த
மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம்...
நாட்டின் உயரிய நீதிமன்றத்தின் நீதியரசர்கள், மிக பொறுமையாக
தெளிவாக ஒருமுறை தீர்ப்பை வெளியிட்ட பின் மீண்டும் மீண்டும்
எவரை காப்பாற்ற காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கிறது
என்று புரியவில்லை...

"குற்றம் சாட்டப்பட்டவர், 90நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து
தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால், அவர் பதவியில் தொடரலாம்;"
என்பதே - மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் 8(4);;; இந்த சட்டத்தின் குறைகளை நிவர்த்தி பண்ணும் வடிவமே நமது உச்சநீதி மன்றம் விதித்துள்ள தீர்ப்பு.. ஆனால் பணம் படைத்த குற்றவாளிகளை காக்கும் பொருட்டு
காங்கிரஸ் அரசு அதை எதிர்த்து அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது...
[அதாவது பழைய மக்கள் பிரிதிநிதித்துவ சட்ட விதி 2 பகுதி 3ஆம்
பிரிவினை மிக தெளிவாக உறுதிபடுத்தியுள்ளது]
கடந்த ஓராண்டில் மட்டும் காங்கிரஸ் அரசு இப்படி 8 முறை அவசர சட்டங்களை இந்திய மக்கள் மீது திணித்துள்ளது.... இப்படி அவசர சட்டங்களால் தான் நாட்டை ஆளவேண்டுமெனில் எதற்கு நீதிமன்றம்?,
எதற்கு நாடாளுமன்றம்? அதில் எதற்கு விவாதங்கள்?!
ஒரு நிரபராதியையோ, நல்லவர்களையோ, காப்பாற்ற காங்கிரஸ் இப்படி போராடி இருக்கிறதா, என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.. தென்னிந்தியாவில் இதுவரை கொல்லப்பட்ட மீனவர்களை காக்க
தீர்க்கமான எந்த நடவடிக்கையும் எடுக்காத காங்கிரஸ் அரசு இந்த அயோக்கியர்களை காப்பதில் இவ்வளவு சிரத்தை எடுத்து கொள்வது
எந்த வகை அரசியல் என்று புரியவில்லை...
இன்று நாட்டில் இருக்கும் நாடாளு மன்றத்தின் 543 உறுப்பினர்களில்,
162 பேர் மீது [32%] கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது..
76 பேர் மீது [14%] கொலை,பாலியல் வல்லுறவு போன்ற கடுமையான வழக்குகள் நடைபெற்று வருகிறது... மேலும் இப்போதுள்ள நமது
அரசியல் கட்சிகளால் நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்தப்பட்ட 74%
[100க்கு 74பேர்] வேட்பாளர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள்..இப்படிப்பட்ட கள்ளர்களையும், போக்கிரிகளையும்
காக்க தான் இந்த காந்திய பெயரை சொல்லும் காங்கிரஸ் கட்சி
முயல்கிறது... திருடனை காக்க திருடன் தானே உதவுவான்...
இப்படியொரு கட்சியிடம் மக்கள் எப்படி இத்தனை ஆண்டுகள்
ஏமாந்தனர் என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி... நமக்கான
மூன்றாவது கட்சி முளைத்து நம்மை முன்னேற்றிட வேண்டும்!!
- ஆருத்ரன் [Thank for the statistics: Dinamani ]


No comments:
Post a Comment