01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Sunday, October 6, 2013

இந்தியா ஏழை நாடல்ல!! #AIS

மண்மோகன் ஜி: இந்தியா ஓர் ஏழை நாடு...
[அமெரிக்க பயணத்தில் ஒபாமாவிடம் சொன்னது]

நமது AIS பதில்: உதவி பெறவேண்டும் என்பதற்காக எதையோ
சொல்றோம்னு இந்தியாவை நீங்களே அசிங்க படுத்தாதிங்க மண்மோகன் ஜி! உண்மையை சொல்ல வேண்டுமெனில் இந்தியா ஒருபோதும்
ஏழை நாடு கிடையாது... அது ஏழை நாடாக இருந்திருந்தால், வெளிநாட்டு மால்கள் முதல் மரபணு மாற்ற விதைகள் வரை இந்திய சந்தையை வளர்ந்த நாடுகள் குறி வைக்காது. மேலும் வளர்ந்த & வளரும் நாடுகளை விட
நம்மிடம் அதிக கனிமவளங்கள் உள்ளது.

இதை குறிவைத்தே ஆட்டோமொபைல் நிறுவனங்கள், சில மின்னணு
மற்றும் ஆட்டோமேஷன் நிறுவனங்கள் இங்கு தயாரிப்பு தொழிற்சாலைகளை நிறுவியுள்ளது.. வளர்ந்து வரும் சீனாவை விட நம்மிடம் போதிய மண்வளமும், போதிய மனித வளமும் நிறைவாக உள்ளது... நமது கனிம வளத்திற்கு உதாரணம்-தோரியம் அதை போன்ற கனிமங்களை அரசின் வழியாக விற்பனை செய்தாலே பெரிய லாபம் ஈட்டலாம், ஆனால் பெரும் கார்பரேட் பணமுதலைகள் அதை சுரண்டும் போது கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால்,நாம் நமது வளத்தை இழப்பதோடு மட்டுமல்லாது, அதனூடான நமது வளர்ச்சியையும் இழக்கிறோம்... என்பதை ஒருபோதும் மறந்துவிட கூடாது...

10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விவசாய நிலங்களின் எண்ணிக்கை இன்று கணிசமாக குறைந்துள்ளது... நமது மண்ணின் நேர்த்தியான விவசாய பொருட்களின் உற்பத்தி குறைந்து கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளிடம் சர்க்கரை,வெங்காயம், போன்ற அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்துள்ளோம்.. இதை விட ஒரு வேட்க்க கேடான விடயம் இல்லை...நாட்டின் உற்பத்தியையும், நாட்டின் ஏற்றுமதியையும் எத்துனை தூரம் நமது காங்கிரஸ் அரசு உயர்த்தியுள்ளது, என்பதையெல்லாம் சிறிதும் சிந்திக்காமல், இந்திய ஓர் ஏழை நாடு சொல்லியிருக்கிங்க...

இந்த ஏழை நாட்டில் தான் முகேஷ் அம்பானி 8000 கோடி ரூபாய்க்கு மும்பையில் சொந்த தனி வீடு கட்டியுள்ளார். ஆடம்பர நாட்டில் பிறந்த பிள்கேட்சம் கூட இத்தனை கோடியில் வீடு கட்டவில்லை என்பது
குறிப்பிடதக்கது. இப்படி பணத்தை விரயம் செய்யும் பணக்காரர்களின் கார்ப்பரெட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நிலுவை வரித்தொகை மட்டுமே கிட்டத்தட்ட 15 லட்சம் கொடிகளுக்கும் மேல் உள்ளதாக தினசரி செய்தித்தாள் செய்திகளிலேயே வெளியாகியுள்ளது....மேலும் நிலக்கரி,2G போன்ற ஊழல்களினால் வீரயமான பணங்களின் கதியென்ன, என்று நீங்களும் சொல்லவில்லை, ஊழல் ஆவணங்கள் காணாமல் போனதற்கு கூட நான் எப்படி பொறுப்பாவேன்.. என்று சொன்ன பிரதமர்... நிலைமை இப்படியாக இருக்க எதைவைத்து இந்தியா ஏழை நாடு என்றீர்கள்...

நமது நாட்டின் பெரிய பெரிய அரசியல் திருடர்கள் சம்பாதித்து பதுக்கி வைத்துள்ள சுவிஸ் மற்றும் மற்ற வெளிநாட்டு வங்கி கணக்குகளின் பணங்கள் எங்குள்ளது... அவைகளின் கணக்குகள் இந்திய வரி விதிப்புகளுக்கு கீழ் உள்ளதா?!! மேலும் இங்கு சினிமா மற்றும் ரியல் எஸ்ட்டேட் தொழிலில் ஈடுபடும் எத்தனை நபர் முறையான வரிகளை கட்டுகின்றனர். இப்படி எதையுமே முழுமையாக செய்வதற்கு கூச்சப்படும் நீங்கள், இந்தியாவை
ஏழை நாடு என்று கூறுவதில் மட்டும் கூச்சப்படுவதில்லை. ஆனால் உண்மையை உணரும் மக்களுக்கு அது முற்றிலும் கூச்சமாக உள்ளது.

# இந்தியா ஏழை நாடல்ல... பெரும்பான்மை இந்தியர்களே ஏழை!! :(

- ஆருத்ரன் 

உசாத்துணை:
http://marablogger.com/?p=3264
http://en.wikipedia.org/wiki/Antilia_(building)
http://www.indiaresource.org/news/2008/1007.html
http://timesofindia.indiatimes.com/india/US-wants-MNCs-to-have-right-to-sue-India-abroad/articleshow/23020788.cms
http://en.wikipedia.org/wiki/List_of_shopping_malls_in_India
http://en.wikipedia.org/wiki/History_of_metallurgy_in_the_Indian_subcontinent
http://www.thehindu.com/news/national/govt-to-make-overseas-assets-disclosure-mandatory/article3002329.ece

1 comment:

  1. அருமையா சொன்னிங்க தல...

    ReplyDelete