01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Saturday, September 28, 2013

ஈழத்திற்காக யார் பேசினாலும் அடையாளப்படுத்துங்கள்....அரசியலாக்காதீர்கள்!!

ஈழ மக்களுக்கான இதை அரசியலாக்காதீர்கள்!
============================================



மருத்துவர் அன்புமணிக்கு ஆதரவு தரும் உலக தமிழர்
பாதுகாப்பு இயக்கம் காரங்க  நல்லவய்ங்களா....
இல்ல கெட்டவைங்களா!!

# மே-17 இயக்கத்தில் ஒரு பாதியினர் இவர்கள் என்பது
 குறிப்பிடத்தக்கது... அங்கு திருமுருகன்காந்தி செய்த டகால்ட்டி வேலையினால் அங்கிருந்து வெளியேறியவர்கள்.... ஹம்ம்ம்...
ஈழத்திற்காக பேசுவதில் கூட பாரபட்சம் காட்டியதால் தான்
 அங்கிருந்து பிரிந்து வந்துள்ளனர்....ஆயினும் இங்கு சில
அரசியல் கட்சியினை அவர்கள் முதன்மை படுத்துவது சுயசார்பை காட்டுகிறது. அதன் பொருட்டு இயங்குதல், அரசியலைத் தவிர
அடிப்படை மக்களுக்கு எந்த நன்மையையும் பயக்கப்போவதில்லை!!

தயவுசெய்து ஈழ மக்களுக்காக பேசும் போதாவது
யார் பெரியவர் என்று தொடை தட்டாமல், அந்த மக்களுக்கு
முடிந்தவரை உதவுங்கள்.... நன்றி!!

- ஆருத்ரன் [அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா]

No comments:

Post a Comment