01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Thursday, August 29, 2013

$1 = INR 68 >>> காரணிகளும் கதைகளும்

$1 = INR 68 >>> காரணிகளும் கதைகளும்
--------------------------------------------------------



முந்தைய ஐந்தாண்டில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட நமது ப்ப்பா.சிதம்பரம் திறமைசாலி தான்.... ஆனால் உண்மையில் தென்னாசியாவின் மிக முக்கிய பொருளாதார மேதைகள் மன்மோகனும்,சிதம்பரமும் என்பதில் நமக்கு ஐயமில்லை..ஆனால் அவர்கள் இப்போது முழு சுதந்திரமாக செயல்படுகின்றனரா? என்பது சந்தேகத்திற்குரிய விடயம்.

ஆயினும் தற்போது இருவருக்கும் டவுசர் கழண்டு விட்டது... இதற்கு முழுக்காரணம் காங்கிரசின் மெத்தனமான பொருளாதார கொள்கையே...



ஆம்...இங்கு இருந்து
*உற்பத்தியாகும் பொருட்களின் தரத்தை அதிகரிக்கும் பொருட்டு அரசு ஒன்று செய்யவில்லை;;

*நமது நாட்டு ஏற்றுமதி முகவர்களை விட இறக்குமதி முகவர்களே அதிக செல்வாக்குடன் உள்ளனர்... அதன் காரணம் அரசின் ஒத்துழைப்பு...அதை ஏற்றுமதியாளர்களுக்கும் வழங்க முனையவில்லை..

*நம் நாட்டு உற்பத்தியாளர்களுக்கான ஊக்குவிப்புகள் முற்போக்கானதாக இல்லை...நமது பாரம்பரிய பயிர்கள் எவையும் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை



*அமெரிக்க,ஐரோப்ப,அரபுநாடுகளுக்கு நம்மை விட குறைந்தவிலையில் பல உணவு பொருட்களை எப்படி தாய்லாந்து, சீனா போன்ற நாடுகள் ஏற்றுமதி செய்கிறது என்ற தெளிவுகளை ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு மத்தியஅரசு நேரடியான பயிற்சிகளோ விளக்கங்களோ தருவதில்லை..

*நேரடியாக சொல்ல வேண்டுமெனில் வெளிநாட்டு முதலீடுகளையும், இறக்குமதிகளையும் ஊக்குவித்த அளவிற்கு உள்நாட்டு உற்பத்தியாளர்களையும், நமது எற்றுமதியாளர்களையும் நம் அரசு அதிக அளவில் ஊக்குவிக்கவில்லை...



இன்னும் நிறைய உள்ளது...ஆனா உங்களுக்கு தூக்கம் வந்துடும் என்பதால் இதோடு விடறேன்.... சரி சரி விடயத்திற்கு வர்றேன்.

மேற்சொன்ன எதையும் பண்ணாத நமது மத்திய அரசு, திடீரென்று *பாட்டாளிகள் வாங்கும் தங்கத்தின் இறக்குமதி வரியை அதிகரித்தது;; *வெளிநாடுகளில் இருந்து வாங்கி வரப்படும் சாதராண தனி நபர் தொலைக்காட்சிகளுக்கும் கூட கஸ்டம்[சுங்கம்] வரி விதித்தது;; இப்படி சிறுபிள்ளைத் தனமாக சிலசில நடவடிக்கைகள் எடுத்த மத்திய நிதி அமைச்சகத்தின் செயல், "தீப்பற்றி எரியும் வீட்டின் மீது 2 பக்கெட்
தண்ணி ஒற்றியதைப் போல் வீணாய் போனது..

இப்போது கடைசியாக உலக பொருளாதார வீழ்ச்சி தான் ரூபாய் வீழ காரணம் என்ற பொய்யை பரப்புகிறது காங்கிரஸ்... *உலக பொருளாதாரம் வீழ்ந்தால் அனைத்து நாட்டு கரன்சியுமல்லவா வீழும்... அப்படி அனைத்தும் வீழும் போது... முன்னர் இருந்த அதே 53ரூபாய் என்ற மதிப்பிலேயே தானே நீடித்திருக்க வேண்டும்... *சரி அப்போ உலக பொருளாதாரம் சரியான உடன் ரூபாய்  பழைய மதிப்புக்கு மீண்டும் வந்துவிடுமா Present மதிப்பு நீடிக்கும் என்பதே முந்தைய வரலாறு!!

அப்போ... உலக பொருளாதார வீழ்ச்சி, அமெரிக்க,ஐரோப்பிய,அரபு நாடுகளை விட்டுவிட்டு இந்தியாவை மட்டும் பாதித்துள்ளது என்ற காங்கிரசின் திரைக்கதை நம்மை போன்று அடிப்படை பொருளாதாரம் அறிவு கொண்ட அனைவருக்கும் விளங்கும் என்பதே என் நிலைப்பாடு...



- ஆருத்ரன்^

3 comments:

  1. என்ன செய்ய இது தான் நமது அரசியல்

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும், சுட்டிக் காட்டினால்,தான் நமது அடுத்த சந்ததியினராவது, தைரியமாக தவறான அரசின் கொள்கைகளை நேர்நின்று விவாதிப்பர் தோழர்...

      Delete
  2. நமது நாட்டின் அரசியல் தவறான நிலையை நோக்கி நகர்ந்த வண்ணமே உள்ளது

    ReplyDelete